- Advertisement -

சென்னையில் நாளை (செப்.15) ஒருநாள் மட்டும் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

“விஜயலட்சுமியும் ஆஜராக வேண்டும்”- காவல் ஆணையரிடம் சீமான் மனு!
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறை நாட்களையொட்டி, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், நாளை (செப்.15) ஒருநாள் மட்டும் சென்னையில் மெட்ரோ ரயில் சேவையின் நெரிசல்மிகு நேரம் (Peak Hours Time) இரவு 10.00 மணி வரை நீட்டிப்புச் செய்யப்பட்டுள்ளது.
கேட்டரிங் மாணவனுக்கு அரிவாள் வெட்டு – இருவர் கைது!
நாளை இரவு 08.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை ஆறு நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


