
பணியில் இருக்கும் போது, காவலர்கள் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுறுத்தியுள்ளார்.

டெல்லி செல்கிறார் அமைச்சர் துரைமுருகன்!
பாதுகாப்புப் பணி மற்றும் போக்குவரத்துப் பணியில் இருக்கும் காவலர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்துவதால், கவனச் சிதறல் ஏற்படுவதாகக் கூறியுள்ள அவர், குறிப்பாக, சட்டம்- ஒழுங்கு பாதுகாப்புப் பணி, முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு, கோவில் மற்றும் திருவிழாக்களின் பாதுகாப்புப் பணியின் போது, செல்போனைக் கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழக அரசு கடிதம்!
போக்குவரத்து ஒழுங்குப்படுத்துதல், போக்குவரத்து விதி மீறல்கள் மீது நடவடிக்கை போன்ற முக்கிய பணிகளில் ஈடுபடும் காவலர்கள் செல்போனைப் பயன்படுத்தக் கூடாது என்றும் சந்தீப் ராய் ரத்தோர் குறிப்பிட்டுள்ளார்.


