spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவெளியே அம்மா உணவகம்! உள்ளே அரசு பள்ளி! - இ.பி.எஸ். கண்டனம்

வெளியே அம்மா உணவகம்! உள்ளே அரசு பள்ளி! – இ.பி.எஸ். கண்டனம்

-

- Advertisement -

சென்னையில் அம்மா உணவகத்தில் அரசு பள்ளி இயங்கி வருவது அதிர்ச்சி அளித்துள்ளதாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி க. பழனிசாமி
பகீர் குற்றம்சாட்டி உள்ளார்.

வெளியே அம்மா உணவகம்! உள்ளே அரசு பள்ளி! - இ.பி.எஸ். கண்டனம்
இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது; அ.தி.மு.க., அரசில் செயல்படுத்தப்பட்ட பல நல்ல திட்டங்களுக்கு மூடுவிழா செய்துவந்த தி.மு.க., அரசு, தொடர்ந்து நாங்கள் ஏழை, எளிய, தொழிலாளர்களின் அட்சயப்பாத்திரமாக விளங்கும் அம்மா உணவகங்களை மூடக்கூடாது என்றும், தரமான உணவுகளை அம்மா உணவகங்களில் வழங்க வேண்டும் என்று வலியுறுத்திவரும் நிலையில், இன்று சென்னை ஆலந்தூர் அருகே உள்ள அம்மா உணவகத்தில் அரசு பள்ளி இயங்கி வருவதாக வெளிவந்த செய்தி மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.

we-r-hiring

இந்தியாவில் உள்ள மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து எல்லாம் அரசு பிரதிநிதிகள் தமிழகத்திற்கு வருகை தந்து அம்மா உணவகங்கள் இயங்குவதையும், தங்களது மாநிலங்களிலும், நாடுகளிலும் உடனடியாக அம்மா உணவகங்களை திறப்போம் என்று சொல்லி வரும் நிலையில், வெளி நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்று கொண்டிருக்கும் முதல்வர் உடனடியாக ஆலந்தூரில் உள்ள அம்மா உணவகத்தை முழுமையாக நடத்தவும், அரசு பள்ளி மாணவர்களுக்கு வேறொரு பாதுகாப்பான இடத்தை வழங்கிடவும் அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.

MUST READ