Homeசெய்திகள்தமிழ்நாடுநாங்குநேரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!

நாங்குநேரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!

-

நாடாளுமன்ற தேர்தலையொட்டி திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புருஸை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. திமுக சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

பாசிசத்தின் பிடியிலிருந்து இந்தியாவைக் மீட்கும் இறுதி வாய்ப்பே வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல் களம். மக்களையும் – மாநிலத்தையும் அடிமைப்படுத்த துடிக்கும் பாசிஸ்ட்டுகளை வீட்டிற்கு அனுப்ப திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் #INDIA கூட்டணி – காங்கிரஸ் பேரியக்கத்தின் வேட்பாளர் அண்ணன் ராபர்ட் புரூஸ் அவர்களை ஆதரித்து நாங்குநேரி பகுதியில் இன்று வாக்கு சேகரித்தோம். மழை, வெள்ள காலங்களில் எட்டிக்கூட பார்க்காமல் கேரண்டி – வாரண்டிகளை தூக்கிக் கொண்டு ஓட்டுக்காக மட்டுமே தமிழ்நாட்டை வலம் வரும் பாசிச கூட்டத்திற்கு வேட்டு வைக்க “கை“ சின்னத்திற்கு வாக்களிப்போம் என நாங்குநேரியில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்களிடம் கேட்டுக்கொண்டோம்.

MUST READ