Homeசெய்திகள்தமிழ்நாடுநயினார் நாகேந்திரனுக்கு 2ஆவது முறையாக சம்மன்!

நயினார் நாகேந்திரனுக்கு 2ஆவது முறையாக சம்மன்!

-

 

நயினார் நாகேந்திரனுக்கு 2ஆவது முறையாக சம்மன்!

தேர்தலின் போது ரூபாய் 4 கோடி ரொக்கத்தை பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் காவல்துறையினர் இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளனர்.

ஓடிடிக்கு வரும் விஜய் தேவரகொண்டாவின் ஃபேமிலி ஸ்டார்!

ஏற்கனவே அனுப்பிய சம்மனுக்கு ஆஜராகாத நிலையில், இரண்டாவது முறையாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்மனை சென்னையில் இருந்த நயினார் நாகேந்திரனிடம் காவல்துறையினர் நேரில் ஒப்படைத்தனர்.

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன், “கைதானவர்கள் நன்கு தெரிந்தவர்கள் தான்; ஆனால் பணம் தன்னுடையது அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 06- ஆம் தேதி அன்று தாம்பரம் ரயில் நிலையத்தில் ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூபாய் 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கில் சதீஷ், பெருமாள், நவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் துருவ் விக்ரம்!

அதன் தொடர்ச்சியாக, நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் காவல்துறையினர் சோதனையின் நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ