2026-ம் ஆண்டு மே மாதம் நடைபெறவிருக்கும் மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்காவில் விதை சேகரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றது.
கோடைக்கால சீசனின் போது, ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்துச் செல்கின்றனர். அந்த வகையில் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியும், ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சியும், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்காட்சியும், கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியும் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடத்தப்படும் மலர் கண்காட்சியை காண வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதனால், ஆண்டுதோறும் தாவரவியல் பூங்கா மற்றும் தொட்டிகளில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்ய உ ள்ளது. இந்த மலர் செடிகளில் ஏப்ரல் இறுதி வாரம் முதல் பூக்கள் பூக்க துவங்கும்.
மே மாதம் இரண்டாவது வாரத்தில் மலர் கண்காட்சி நடத்தப்படும். அப்போது பல வகையான வண்ண வண்ண மலர் பூத்துக்குலுங்கும். மலர் செடிகள் நடவு செய்யப்பட்ட தொட்டிகள் அலங்கரித்து வைக்கப்படும். இதனை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவாா்கள். இந்த மலர் கண்காட்சிக்காக நாற்றுகள் நடவுசெய்ய தற்போது விதை சேகரிப்பு பணிகள் நடந்து வருகிறது. 6 மாதங்களுக்கு பின் பூக்கக்கூடிய மலர் செடிகளான பென்சீனியம், பெட்டூனியம் மற்றும் சால்வியா போன்ற சில மலர் செடிகளின் விதைகள் சேகரிக்கும் பணிகள் துவங்கி நடந்து வருகிறது. அதேபோல், விதைகள் சேகரிக்கப்பட்ட மலர் செடிகள் மற்றும் மழையில் அழுகிய செடிகளை அகற்றும் பணிகளும் துவங்கியுள்ளது. மேலும், அப்பகுதிகளில் பாத்திகளை சீரமைத்து விதைப்பிற்காக தயார்படுத்துப்பட்டு வருகிறது.
உயிர் போகும் தருவாயிலும் மாணவர்களைக் காப்பாற்றிய ஆட்டோ டிரைவர்…


