உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட கற்பு பூமி திரைப்படத்தை வெளியிட சென்சார் போர்டு அனுமதிக்கவில்லை என்றால் சென்சார் போர்டுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுப்போம் என எம்.பி திருமாவளவன் பேச்சு!
தமிழகத்தில் பெரிதும் பேசப்பட்ட பொள்ளாச்சி சம்பவத்தை அடிப்படையாக கொண்டு கற்பு பூமி என்ற படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.

நேசம் முரளி எழுதி இயக்கி தயாரித்து உள்ள இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியிட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் மற்றும் நக்கீரன் கோபால் மற்றும் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, செய்தி வாசிப்பாளர்கள் சங்க தலைவர் பிரபுதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
படத்தின் தலைப்பிற்கு சென்சார் போர்டு அனுமதி அளிக்கவில்லை என்பதால் படத்தின் பாடலை வெளியிட முடியாத சூழல் உள்ளது என கூற உடனே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் படத்தை தானே சென்சார் போர்டு வெளியிட கூடாது, படத்தின் பாடலை வெளியிடுவதற்கு சென்சார் போர்டு என்ன சொல்ல வேண்டும் என கூறி படத்தின் பாடலை வெளியிட்டார்.
அதனை தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன் மேடையில் பேசுகையில், இந்தியாவில் தற்பொழுது உள்ள பள்ளிகளில் ஜெய் ஸ்ரீராம் என கோஷம் எழுப்ப சொல்கிறார்கள். இந்த அநியாயத்தையும் அநீதியையும் கண்டும் கோபம் வருகிறது. பொள்ளாச்சி சம்பவத்தில் நம்மால் என்ன செய்ய முடிந்தது. அதுபோல போக்கினை அது போல கலாச்சாரம் வளர்ந்து வருவது இந்த கால சூழ்நிலையில் குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால் அந்த படத்திற்கு பொள்ளாச்சி என பெயர் சூட்டப்பட்டது. இது போன்ற படம் விலை போனாலும் போகாவிட்டாலும் கவலை இல்லாமல் இது போன்ற கதைக்களத்தை இயக்குனர் இயக்கி இருக்கிறார். கற்பு பூமி என்ற பெயரையும் பயன்படுத்தக் கூடாது என சொல்லி இருக்கிறார்கள். கற்பு பூமி என்ற பெயரில் என்ன இருக்கிறது. வெளிப்படையாக சாதியை உணர்வை வெளிப்படுத்தும் திரைப்படத்திற்கு சென்சார் போர்டு அனுமதி வழங்குகிறது. ஆனால் தமிழகத்தில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்தேறி இருக்கிறது அது தொடர்பான திரைப்படத்திற்கு சென்சார் போர்டு 150 இடங்களில் படத்தின் காட்சிகளை வெட்ட சொல்லி இருக்கிறது.
சென்சார் போர்டு இருப்பவர்களின் அரசியல்வாதிகளை நியமிக்க கூடாது அவர்களை எல்லாம் தற்பொழுது எல்லாவற்றையும் அரசியல் ஆக்கிவிட்டனர் . இது நேசம் முரளிக்கு மட்டும் நேர்ந்த ஒரு போராட்டம் அல்ல, தனிப்பட்ட முறையிலே அவருடைய படைப்புக்கு எதிராக இங்கே நிகழ்த்தப்படுகிற ஒரு ஒடுக்குமுறை என்பதை நாம் பார்க்க முடியாது. கருத்தியல் சார்ந்த பகைதான் இதன் உள்ளே உள்ளடக்கமாக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. அநீதி குறித்தும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற சூழல் குறித்தும் ஒரு படம் பேசக்கூடாதா என கேள்வி எழுப்பினார். இடதுசாரி என்றால் கம்யூனிஸ்ட் என்று மட்டும் அர்த்தமல்ல வலதுசாரி சிந்தனைக்கு எதிராக முற்போக்குக்கான சிந்தனை அனைத்துமே இடதுசாரி சிந்தனை தான் என கூறினார்.
அருமை தோழர்களே இது நேசம் முரளிக்கு மட்டுமே எதிர்த்து நின்று போராடக்கூடிய ஒன்று அல்ல அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் எதிரான பக்கத்திலே நின்று குரல் கொடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. போராட வேண்டிய தேவை இருக்கிறது.
சென்சார் போர்டுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்தால் நாங்கள் இதே நிகழ்ச்சிக்கு வந்ததைப் போல அண்ணன் திருநாவுக்கரசர் மற்றும் வேல்முருகன் நான் போன்றவர்கள் கட்டாயமாக அந்த ஆர்ப்பாட்டத்தில் வந்து பங்கேற்போம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
இயக்குநர் ஆர்.கே செல்வமணி பேசுகையில், இந்த ஆராஜகத்திற்கு பலியான முதல் இயக்குனர் நான். இவர் போராடி இருக்கிறார். இந்த போராட்டத்தை நான் தொடங்கி இருந்தால் இவர்களை போன்றோர் மாட்டியிருக்க மாட்டார்களோ என்னவோ நான் சமாதானம் ஆகிவிட்டேன். சுதந்திரத்திற்காக போராடியவர்கள் யாரும் சுதந்திரத்தை அனுபவிக்கவில்லை வாரிசுகள் தான் அனுபவித்தனர்.
இரண்டு விஷயங்கள் இருக்கிறது யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும் ஆனால் அதற்கு அடிபணிந்தும் போகக் கூடாது. புலன் விசாரணை படத்தில் உண்மை சம்பவத்தை அப்படியே சொல்லாம் சட்ட சிக்கல் வாராமல் எடுத்தேன். கேப்டன் பிரபாகரன் படத்திலும் மக்கள் புரிந்து கொள்ளும் படி எடுத்தேன். இதன் வெற்றி உண்மை சம்பவத்தை எடுத்தால் மக்கள் விரும்புகிறார்கள் என்று அடுத்து குற்றப் பத்திரிகை படத்தை எடுக்கிறேன். அப்போ ஒரு உண்மையை தெரிந்து கொண்டேன் இந்தியாவில் உண்மையை சொல்லக் கூடாது என்று. எவ்வளவு அபத்தம், ஆபாசமும் சொல்லலாம் ஆனால் உண்மையை சொல்லக் கூடாது.
இவர்கள் போன்றோருக்கு முன்னுதாரணம் திராவிடம்தான். பராசக்தி என்றொரு படம். அறிஞர் அண்ணா சொன்னார் சென்சார் இல்லை என்றால் மூன்று படத்திலேயே திராவிட நாடு வாங்கிடுவேன். அவர்களுடைய கருத்துகளை வைத்துக் கொண்டு எப்படி தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றும் அளவிற்கு திரைப்படத்துறையை பயன்படுத்தினார்கள் என்பதை இப்பட்ததின் இயக்குனர் தெரிந்து கொள்ள வேண்டும்.
எங்கேயும் அராஜகம் அதிகரிக்கும் போது அதற்கான புரட்சி தொடங்கிவிடும். அதிகாரிகளின் வேலை அதிகாரத்தையும் ஆட்சியையும் காப்பாற்றுவதல்ல மக்களை காப்பாற்றுவதுதான். ஆனால் இப்போது அதிகாரத்தையும் ஆட்சியையும் காப்பாற்றுவே அவர்களின் வேலையாகி விட்டது.
படைப்பாளிகளை நசுக்காதீர்கள் எல்லோரும் அடங்கிப்போக மாட்டர்கள் ஒருநாள் பிரளயமாக மாறும். சட்டத்திற்குட்பட்டு நீங்கள் வேலை செய்ய வேண்டும். திரைப்படம் மக்களை கெடுக்கக் கூடாது என்ற நோக்கத்தில் தான் நீங்கள் வேலை செய்ய வேண்டும் ஆட்சியை காப்பாற்றும் நோக்கில் அல்ல என்று தெரிவித்துள்ளார்.
அதன்பிறகு பேசிய திருநாவுக்கரசு, சென்சார் போர்டில் அரசியல்வாதிகளை போடக் கூடாது. அது ஆறுதல் பரிசாக மாறிவிட்டது. சினிமாவிற்கு சம்பந்தம் இல்லாத ஆட்களை கட்சியில் இருக்கிறார் என்பதற்காக சென்சார் போர்டில் நியமித்து உள்ளனர். இது தேவையில்லாத பிரச்சினையை உருவாக்கும் என்று பேசினார்.