spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"பெரியார், அண்ணாவின் வாரிசாக செயல்படுகிறேன்"- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“பெரியார், அண்ணாவின் வாரிசாக செயல்படுகிறேன்”- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

-

- Advertisement -

 

"பெரியார், அண்ணாவின் வாரிசாக செயல்படுகிறேன்"- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

we-r-hiring

“அண்ணா, பெரியார் வாரிசு எப்படி செயல்பட வேண்டுமோ அப்படி செயல்பட்டு வருகிறேன்” என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர் சரிவில் தங்கம் விலை – மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!

ஆளுநர் உரைக்கு நன்றித் தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஆளுநரின் நடவடிக்கை தமிழக மக்களைக் கொச்சைப்படுத்தும் நடவடிக்கையாகும். தெற்கு வளர்கிறது; வடக்கிற்கும் சேர்த்து தெற்கு வாரி வழங்குகிறது. வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது என்ற நிலை மாறியுள்ளது. ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை.

கோடிக்கணக்கான மக்களின் வளர்ச்சிக்காக என் மனசாட்சியின்படி நான் செயல்பட்டு வருகிறேன். அண்ணா, பெரியாரின் வாரிசு எப்படி செயல்பட வேண்டுமோ அப்படி செயல்பட்டு வருகிறேன். அரசியல் செய்யும் விதமாக சட்டப்பேரவையில் ஆளுநர் நடந்துக் கொண்டதாக நினைக்கத் தோன்றுகிறது. ஆளுநர் அரசியல் நடவடிக்கையாக சட்டப்பேரவையை பயன்படுத்திக் கொண்டார்.

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமின் மனு இன்று விசாரணை

இதுபோன்ற சிறுபிள்ளை விளையாட்டுகளை பார்த்து பயந்துவிட மாட்டேன். போற்றுவோர் போற்றட்டும், புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும்; இந்தியாவின் வளர்ச்சிக்கு 9% பொருளாதார பங்கை தமிழகம் தருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ