Homeசெய்திகள்தமிழ்நாடு"பொங்கலின் போது மக்களுக்கு இடையூறு ஏன்?"- உயர்நீதிமன்றம் கேள்வி!

“பொங்கலின் போது மக்களுக்கு இடையூறு ஏன்?”- உயர்நீதிமன்றம் கேள்வி!

-

- Advertisement -

 

“பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு ஏன் இடையூறு செய்ய வேண்டும்?” என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

“ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கைத் தேவை”- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சி.ஐ.டி.யு, அண்ணா தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் இரண்டாவது நாளாகத் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். எனினும், தமிழகத்தில் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

போக்குவரத்துத் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் தொடர்பான வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அமர்வில் இன்று (ஜன.10) காலை 11.00 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி அமர்வில், “பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு ஏன் இடையூறு செய்ய வேண்டும்? போராட்டம் நடத்த உரிமையுள்ளது; பண்டிகை நேரத்தில் போராட்டம் நடத்துவது முறையற்றது.

வேலை நிறுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுவது மக்கள் தான்; நகரத்தில் உள்ள மக்கள் அதிகம் பாதிக்கப்படவில்லை என்றாலும் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசும், போக்குவரத்து தொழிற்சங்கமும் ஏன் இந்த விவகாரத்தில் பிடிவாதமாக இருக்கிறீர்கள்? இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதில் என்ன பிரச்சனை உள்ளது? என்று சரமாரியாக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் 2ஆவது நாளாக வேலை நிறுத்தம்!

இதனிடையே, தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், சட்டவிரோதமாக் வேலை நிறுத்தம் நடத்துகின்றனர்” என்று வாதிட்டார்.

இதையடுத்து, ஓய்வூதியர்களுக்கு மட்டும் ஜனவரிக்கான அகவிலைப்படி வழங்குவது குறித்து பதிலளிக்க உத்தரவிட்ட தலைமை நீதிபதி அமர்வு, வழக்கு விசாரணையை இன்று (ஜன.10) பிற்பகல் 02.15 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

MUST READ