
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சந்தித்துப் பேசினார்.
புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு மறைமுகமாக உதவி செய்யும் அஜித்
சென்னை வந்துள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஹெலிகாப்டர் மூலம் சென்னையில் மழை, வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சந்தித்துப் பேசினார்.
அப்போது, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், வெள்ளப் பாதிப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்தார். அத்துடன், தமிழக வெள்ள பாதிப்புகளுக்காக, நிவாரணத் தொகையை விடுவிக்கக் கோரி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தினார்.
மயில்சாமியை நினைவு கூறும் சென்னை மக்கள்… 2015-ல் உதவியதாக உருக்கம்…
இந்த நிகழ்வின் போது, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.