Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

-

- Advertisement -

 

இணையவழி சூதாட்டத் தடைச் சட்டத்துக்கு எதிரான வழக்குகள்- பதில் அளிக்க தமிழக அரசுக்கு அவகாசம்!
File Photo

ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறைப் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“கோடநாடு வழக்கில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவர்”- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 14- ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து, ஏழாவது முறையாக நீதிமன்றக் காவலை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஏற்கனவே 2 முறை தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று (அக்.11) பிற்பகல் விசாரணைக்கு வந்த போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அறுவைச் சிகிச்சை செய்ததில் இருந்து உடல்நிலை இன்னும் முழுமையாகக் குணமடையவில்லை; அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என்று வாதிடப்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

இது குறித்து அமலாக்கத்துறைப் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 16- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

 

MUST READ