Homeசெய்திகள்தமிழ்நாடுரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனங்களுக்கு உத்தரவு! உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான...

ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனங்களுக்கு உத்தரவு! உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு

-

- Advertisement -

உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் நடைபெற்ற  மேல்முறையீட்டு மனுவானது விசாரணைக்கு வந்தது.

இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனங்களுக்கு உத்தரவு! உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு

பிரதீஷா என்பவர், கடந்த 2019ம் ஆண்டு நடந்த விபத்தில் படுகாயம் அடைந்துள்ளாா்.  சென்னையை சோ்ந்தவரான அவர் பயணித்த வேன் மீது லாரி மோதியதில் பிரதீஷா படுகாயமடைந்ததோடு, அவருக்கு 50 சதவீதம் உடல் ஊனம் ஏற்பட்டதால், அவருடன் பயணித்த அவரது தாயாரும் உயிரிழந்தார். இதனால் அவரது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து, விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பிரதீஷாவுக்கு ரூ.1.72 லட்சம் காப்பீட்டு இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக பிரதீஷா, தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அதில் “விபத்து காரணமாக பிரதீஷா கல்வியை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வேலைவாய்ப்பு, வாழ்க்கைக்கான பாதுகாப்பு என பல்வேறு இழப்புகளை அவர் சந்தித்துள்ளார். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் தனது தனி அதிகாரத்தை பயன்படுத்தி,  பிரதீஷாவிற்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கிறோம்’ எனக்கூறி வழக்கை முடித்து வைத்துள்ளாா்.

அதிமுக பொதுச்செயலாளர் செங்கோட்டையன்: அட்ராசிட்டி கிளப்பும் ர.ர-க்கள்..!

MUST READ