- Advertisement -
தைப்பூசம் திருவிழாவை ஒட்டி நெல்லை மற்றும் தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே நிரவாகம் அறிவித்துள்ளது.
தைப்பூசம் விடுமுறையையொட்டி, நாளை முதல் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாளை இரவு 11.45 மணிக்கு எழும்பூர், நெல்லை இடையேயான சிறப்பு ரயில் புறப்படுகிறது. மறுமார்க்கத்தில் பிப்ரவரி 1 ஆம் தேதி இரவு 11.35 மணிக்கு அந்த ரயில் புறப்படும்.
இதேபோன்று தாம்பரம் – தூத்துக்குடி இடையேயான ரயில் ஜனவரி 31 இரவு 11.50 மணிக்கு பறப்பட உள்ளது. மறுமார்க்கத்தில் பிப்ரவரி 1 ஆம் தேதி இரவு 11.55 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



