spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆளுநர் ரவியின் மாயாஜால வித்தையை தமிழ்நாட்டு மக்கள் நம்ப மாட்டார்கள் – திருமாவளவன் ஆவேசம்…

ஆளுநர் ரவியின் மாயாஜால வித்தையை தமிழ்நாட்டு மக்கள் நம்ப மாட்டார்கள் – திருமாவளவன் ஆவேசம்…

-

- Advertisement -

திருக்குறள், திருவள்ளுவர் நந்தனர் என தமிழ் புலவர். அறிஞர்களை எல்லாம் பேசி சனாதானத்திற்கு ஆதரவான புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த நினைக்கும் R.S.S ஆதரவாளர்  ஆளுநர் ஆர்.என்  ரவியின் மாயாஜால வித்தையை தமிழ்நாட்டு மக்கள் நம்ப மாட்டார்கள்,என விசிக தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளாா்.  ஆளுநர் ரவியின் மாயாஜால வித்தையை தமிழ்நாட்டு மக்கள் நம்ப மாட்டார்கள் – திருமாவளவன் ஆவேசம்…தமிழ், திருவள்ளுவர் என்றெல்லாம் பேசி தமிழக மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் இதே அமித்ஷா தான் ஒடிசாவில் தமிழ்நாட்டை சேர்ந்த தமிழர் ஒருவர் முதல்வராகிவிடக்கூடாது என்பதில் உறுதி காட்டியவர். மதவாதத்திற்கு எதிரான ஜனநாயக கட்சிகளை ஒருங்கிணைப்பது என்பது மட்டும்தான் விசிகவின் தற்போதைய நிலைப்பாடு.

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்று மோடி ,அமித்ஷா இருவரும் பேசி வருவது மற்ற அரசியல் கட்சிகளை கூட்டணிக்கு கொண்டுவர கூறும் ஆசை வார்த்தைகள். எடப்பாடி பழனிச்சாமி வாயிலிருந்து கூட்டணி ஆட்சி என்ற வார்த்தை இதுவரை வரவில்லையே என பெரம்பலூரில் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளாா்.

we-r-hiring

MUST READ