- Advertisement -
வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.
தமிழக வெளியிட்டுள்ள அரசாணையில், வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவிப்பதாகவும், வெப்ப அலையால் மரணம் அடைபவர்களுக்கு மாநில பேரிடர் நிதியிலிருந்து ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான மருத்துவ வசதிகள் மற்றும் ஓஆர்எஸ் கரைசல் வழங்குவதற்கு மாநில பேரிடர் மேலாண்மை நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், வெப்ப அலை தாக்கத்தின்போது தண்ணீர் பந்தல்கள் அமைத்து, குடிநீர் வழங்குவதற்கும் மாநில பேரிடர் மேலாண்மை நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.