ஈரானில் இருந்து நாடு திரும்புவோரில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை கண்டறிந்து அழைத்து வரும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் நிலமை கண்காணிக்கப்பட்டு தமிழர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்ய தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.இஸ்ரேல் ஈரான் நாடுகளில் உள்ள தமிழர்களின் விவரங்களை பெற்று உடனே உதவிகளை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளாா். இஸ்ரேல் ஈரான் இடையே ஏற்ப்பட்டுள்ள போர் காரணமாக அந்நாட்டில் வசிக்கும் தமிழர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்- 011 24193300, கைப்பேசி எண் – 9289516712 என்ற எண்களிலும், tnhouse@tn.gov.in, procofficetnh@gmail.com ஆகிய ஈமெயில் மூலமாகவும் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
