டாஸ்மாக் முறைகேடு புகாரில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு அமலாக்கத்துறையின் அவலத்தை அம்பலம்படுத்தியுள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பாக, திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி சீல் வைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வு

டாஸ்மாக் முறைகேட்டில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு தொடர்பு உள்ளது என்பதற்கு அமலாக்கத் துறையிடம் எந்த ஆதாரங்களும் இல்லை எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில், இருவரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தவும், பறிமுதல் செய்யவும் அமலாக்கத் துறைக்கு எந்த அதிகார வரம்பும் இல்லை எனக் கூறி, அமலாக்கத் துறையின் மேல் நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.
சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்ட பிரிவு 17-ன் கீழ் தகவலின் அடிப்படையில், எந்தவொரு நபரும் பணமோசடி செய்யும் எந்தவொரு செயலையும் செய்துள்ளார் அல்லது பணமோசடியில் தொடர்புடைய குற்றத்தின் எந்தவொரு வருமானத்தையும் வைத்திருக்கிறார் அல்லது பணமோசடி தொடர்பான எந்தவொரு ஆதாரங்களை வைத்திருக்கிறார் என்று நம்புவதற்கு காரணம் இருந்தால், சாவிகள் கிடைக்காதபோது எந்தவொரு கதவின் பூட்டையும் உடைக்க அல்லது சோதனையின் போது காணப்படும் எந்தவொரு சொத்தின் ஆவணங்கள் கைப்பற்ற சம்பந்தப்பட்ட இடத்தில் நுழைய, தேட, அங்கீகரிக்க அதிகாரம் அளிக்கிறது.ஆனால் இதோ ஆதாரம் என அறிக்கையை மட்டுமே அமலாக்கத்துறை சமர்ப்பித்தது என்றும் அது மனுதாரரைப் பற்றி தகவல் என்று கூறி, தேடுதல் நடவடிக்கைகளைத் தொடங்க வழிவகுத்தது என அமலாக்கத்துறை கூறினாலும், அந்த சுருக்கமான அறிக்கை, நம்புவதற்கான காரணம் குறித்து இயக்குநரகம் வைத்திருப்பதாகக் கூறும் தகவல் அல்லது பொருட்களுடன் தொடர்புடையது அல்ல.
இதன்மூலம் மனுதாரர்களில் சொந்தமான இடங்களில், சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர்களுக்கு அதிகாரம் இல்லை. அமலாக்கத்துறையால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், முற்றிலும் அதிகாரம் அல்லது அதிகார வரம்பு இல்லாதது என்று நீதிபதிகள் தெரிவித்திருப்பது அமலாக்கத்துறையின் அவலத்தை அம்பலப்படுத்தி உள்ளதாக எஸ்.குமாரதேவன், (சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்), சி.கனகராஜ், (சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்) கே.திலகேஸ்வரன், (சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்) வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனா்.
மேலும்,அமலாக்கத்துறை, சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டபோது, குற்றத்திற்கான எந்தவொரு ஆவணமோ அல்லது ஆதாரங்களோ அவர்களிடம் இல்லை எனவும் உயர் நீதிமன்றம் அமலாக்கத்துறை மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது என்றனா்.
“யோக்கிய சிகாமணி” எடப்பாடி கருத்துக்கள் வேடிக்கையாகவே உள்ளது- மா.சுப்பிரமணியன் கண்டனம்