spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபேரவையில் எதிர்கட்சிகள் பேசுவதை நேரலை செய்யாதது ஏன்? சபாநாயகருடன் வாக்குவாதம்

பேரவையில் எதிர்கட்சிகள் பேசுவதை நேரலை செய்யாதது ஏன்? சபாநாயகருடன் வாக்குவாதம்

-

- Advertisement -

பேரவையில் எதிர்கட்சிகள் பேசுவதை நேரலை செய்யாதது ஏன்? சபாநாயகருடன் வாக்குவாதம்

சட்டமன்றத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில்  சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர்.

Image

அப்போது எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் பேசுவதையாவது நேரலையாக ஒளிபரப்பு செய்யாது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சட்டமன்ற விவகாரங்களை ஒளிபரப்புவது என்பது அந்தந்த தொலைக்காட்சிகளின் விருப்பத்தை பொறுத்தது. அந்த அடிப்படையில் தான் வெளியிடுவார்களே தவிர, இதையெல்லாம் போட வேண்டும் என கட்டாயப்படுத்த முடியாது. இதுதான் உண்மை. இந்த உண்மையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.
இதனையடுத்து பேசிய சபாநாயகர் அப்பாவு, “எதிர்க்கட்சித் தலைவருக்கு மட்டும் வாய்ப்பு கொடுங்கள் என கேட்பது ஏற்புடையதல்ல. முன்வரிசையிலுள்ள எல்லா கட்சித் தலைவர்களுடனும் பேசி முடிவெடுக்கப்படும். மேலும், படிப்படியாகத்தான் இதை செய்ய முடியும் என பலமுறை தெளிவுபடுத்தி விட்டேன். எதிர்க்கட்சித் தலைவர் மட்டும் நேரமில்லை நேரத்தில் (ஜீரோ ஹவரில்) பேசுவதை ஒளிபரப்ப வேண்டும் என்பது ஏற்புடையதல்ல” என்று தெரிவித்தார்.
இதனையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதை நேரலை செய்யாதது குறித்து அளித்த விளக்கத்தை ஏற்றகவில்லை என்று கூறி அமைச்சர் பதிலுரையை புறக்கணித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

MUST READ