Homeசெய்திகள்தமிழ்நாடு"தமிழக அரசு சரியாக செயல்படவில்லை"- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

“தமிழக அரசு சரியாக செயல்படவில்லை”- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

-

 

சென்னை மழை பாதிப்புத் தொடர்பாக, தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

“அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்”- உயர்நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 7-ம் ஆண்டு நினைவுத் தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர்வளையம் வைத்து மரியாதைச் செலுத்தினார்.

நாராயணபுரம் ஏரி உடைந்தது….பெட்ரோல் பங்க்குகளில் கூட்டம் அலைமோதியது!

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “சென்னை மழை பாதிப்பு தொடர்பாக, தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. மின்சாரம் தடைபடும் என்று பொதுமக்களுக்கு முன்கூட்டியே பொதுமக்களுக்கு முன்கூட்டியே அரசு எந்த அறிவிப்பையும் தரவில்லை. கடந்த 2015- ஆம் ஆண்டு மழையை அ.தி.மு.க. அரசு சிறப்பாக கையாண்டதால், 2016- ஆம் ஆண்டு அ.தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களித்தனர்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ