spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநெல்லையில் ரூ.1260 கோடி முதலீடு செய்கிறது விக்ரம் சோலார் நிறுவனம்

நெல்லையில் ரூ.1260 கோடி முதலீடு செய்கிறது விக்ரம் சோலார் நிறுவனம்

-

- Advertisement -

நெல்லையில் ரூ.1260 கோடி முதலீடு செய்கிறது விக்ரம் சோலார் நிறுவனம்

நெல்லையில் கங்கைகொண்டான் அருகே ரூ.1260 கோடி முதலீட்டில் விக்ரம் சோலார் நிறுவனம் தொழிற்சாலை அமைக்கிறது. 146 ஏக்கரில் அமைய உள்ள இந்த தொழிற்சாலை மூலம் 3000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தகவல். சோலார் பேனல் தொழிற்சாலையில் 3 ஜிகா வாட் சோலார் செல் மற்றும் பிவி சேலார் மாடியூல் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவில் பணவீக்கம் …எகிறிய தங்கம் விலை

we-r-hiring

சுற்றுச்சூழல் அனுமதி கோரி விக்ரம் சேலார் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. சேலார் செல் உற்பத்தி தொழிற்சாலைகளின் மையமாக மாறிவரும் நெல்லை.

கங்கைகொண்டான் சிப்காட்டில் ஏற்கனவே டாடா நிறுவனத்தின் டிபி. சோலார் (TPSL) நிறுவனம் 313.53 ஏக்கர் நிலப்பரப்பில் சோலார் செல் மற்றும் மாட்யூல் உற்பத்தி தொழிற்சாலையை அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ