Homeசெய்திகள்தமிழ்நாடுகணவரிடம் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை!

கணவரிடம் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை!

-

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இரண்டு குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்தவர் கோபிநாத். இவர் விழுப்புரம் அடுத்த மேல்பாதி கிராமத்தை சேர்ந்த பென்னரசி என்ற பெண்ணை கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 7 வயதில் கார்த்திகா என்ற மகளும், 4 வயதில் மோனிகா என்ற ஒரு மகனும் இருந்தனர். மோனிகா அடிக்கடி தனது தாய் மற்றும் சிலரிடம் செல்போனில் பேசியுள்ளார். இதனை கோபிநாத் கண்டித்த நிலையில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கோபிநாத் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பென்னரசியின் செல்போனை கீழே போட்டு உடைத்துள்ளார். இதனால் கடந்த இரண்டு நாட்களாக மன உலைச்சளில் இருந்துள்ளார் மோனிகா.

இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத போது மகள் மற்றும் மகனை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்துவிட்டு, அவரும் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. வீட்டிற்கு வந்து பார்த்த போது மூவரும் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோபிநாத் இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மூவரது சடலத்தையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

MUST READ