Homeசெய்திகள்தமிழ்நாடுவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்!

-

 

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள் என்பதால் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுங்கக் கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் அரசுப் பேருந்தை அனுமதிக்காத ஊழியர்கள்!

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் படி, வேட்பு மனுத்தாக்கலுக்கு கடைசி நாளில் இருந்து 10 நாட்களுக்கு முன்னர் வரை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் மார்ச் 20- ஆம் தேதி தொடங்கி, மார்ச் 27- ஆம் தேதி நிறைவடைய உள்ளது.

எனவே, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்கள் பெயரை www.voter.eci.gov.in என்ற இணையதளத்திலும், வோட்டர் ஹெல்ப்லைன் என்ற மொபைல் செயலில் மூலமாக விண்ணப்பிக்கலாம். இன்று (மார்ச் 17) வரை பெறப்படும் விண்ணப்பத்தாரர்களின் பெயர்களை வாக்காளர் துணை பட்டியலில் சேர்க்க பரிசீலிக்கப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள்!

அதன்பிறகு விண்ணப்பிப்பவர்களின் பெயர்களை பட்டியலில் சேர்க்க, தேர்தலுக்குப் பிறகு பரிசீலிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

MUST READ