Homeசெய்திகள்தமிழ்நாடு"தனது அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?" –...

“தனது அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

2025ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தனது உரையை நிகழ்த்தாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறி இருப்பது தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில், ஆளுநரை கண்டித்து தனது எக்ஸ்தளத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளாா்."தனது அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?" – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அந்த பதிவில் – “தனது அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?” என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா! அரசியல் சட்டப்படி, ஆண்டின் தொடக்கத்தில் அரசின் உரையை மாநில ஆளுநர் வாசிப்பது சட்டமன்ற ஜனநாயகத்தின் மரபு! அதை மீறுவதையே தனது வழக்கமாக வைத்துள்ளார். கடந்த ஆண்டுகளில் இருந்ததை வெட்டியும், இல்லாததை ஒட்டியும் வாசித்த ஆளுநர் இம்முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது.

தமிழ்நாட்டு மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.  என  முதலமைச்சர் தனது வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

‘தமிழக ஆளுநர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்’: திமுகவுடன் கைகோர்த்த விஜய்..!

MUST READ