
ஆவடி மாநகராட்சியின் புதிய கமிஷனராக பொறுப்பேற்றார் ஐஏஎஸ் அதிகாரி எஸ் கந்தசாமி.
சென்னை அடுத்த ஆவடி நகராட்சி கடந்த 2019ம் ஆண்டு அதிமுக ஆட்சிகாலத்தில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் 14 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு செய்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்து இருந்தது.
அதன்படி சென்னை மாநில விருந்தினர் மாளிகையில் வரவேற்பு மற்றும் மாநில நெறிமுறை அலுவலராக இருந்த எஸ்.கந்தசாமி-க்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு ஆவடி மாநகராட்சியின் புதிய கமிஷனராக தமிழ்நாடு அரசு நியமித்தது. இதனையடுத்து ஆவடி மாநகராட்சியில் புதிய கமிஷனராக எஸ்.கந்தசாமி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
எஸ்.கந்தசாமி ஐ.ஏ.எஸ் ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு பொருப்பேற்க்கும் 9வது கமிஷனராகவும், 3வது ஐ.ஏ.எஸ் அதிகாரியாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.