இனத்தால் மொழியால் மதத்தால் பிளவு ஏற்படுத்தி தேர்தல் நேரத்தில் குளிர்காயலாம் என்று நினைக்கின்ற முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு குளிர் ஜுரம் தான் வருமே தவிர வேறு எதுவும் கிடைக்காது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.சென்னை புளியந்தோப்பில் உள்ள மன்னார் சாமி தெருவில் ரூபாய் 32 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திறந்து வைத்து வைத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, தமிழகத்தை விட்டு பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்படவில்லை என்றால் முதல்வர் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறிய கருத்துக்கு பதில் அளித்த அமைச்சர், தமிழிசை என்ன செய்து விடுவார்? அவரே துப்பாக்கியை ஏந்துவாரா? என்று கேள்வி எழுப்பிய அவர், தமிழ்நாடு இனம் மதம் மொழிகளுக்கு அப்பாற்பட்ட பூமி, தீவிரவாதத்திற்கு எப்பொழுதும் தமிழக முதல்வர் துணை போக மாட்டார் என்றும், தீவிரவாதத்தை எப்பொழுதும் இரும்பு கரம் கொண்டு அடக்குவார் என்றும் கூறினார்.
மேலும், பேசிய அவர் அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தில் இதுபோன்ற விஷ விதைகளை விதைக்க முற்படுகிறார்கள். அதற்கு துளியும் தமிழகம் இடம் தராது என்றும் சகோதர சகோதரிகளாக இஸ்லாமியர்கள் இந்துக்கள் ஒன்றாக உள்ளனர் என்றார். இனத்தால் மொழியால் மதத்தால் பிளவு ஏற்படுத்தி, தேர்தல் நேரத்தில் குளிர்காயலாம் என்று நினைக்கின்ற முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு குளிர் ஜுரம் தான் வருமே தவிர வேறு எதுவும் கிடைக்காது என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.
தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கம்…முதல்வர் பரிசளிப்பு!