Homeசெய்திகள்க்ரைம்வேலைக்கு சேர்ந்த ஏழேநாளில் ஊழியரின் செயல்….அதிர்ச்சியில் உரிமையாளர்!

வேலைக்கு சேர்ந்த ஏழேநாளில் ஊழியரின் செயல்….அதிர்ச்சியில் உரிமையாளர்!

-

- Advertisement -

சென்னை சைதாப்பேட்டையில் நகைக்கடையில் 60 சவரன் ஊழியர் கைவரிசை நகைகளை திருடிக் கொண்டு தப்பி ஓட்டம்.வேலைக்கு சேர்ந்த ஏழேநாளில் ஊழியரின் செயல்….அதிர்ச்சியில் உரிமையாளர்!சென்னை சைதாப்பேட்டை பஜார் சாலையில் ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட சுந்தர் என்பவர் சாயார் ஜுவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் பணிபுரிந்த ரோகித் என்ற இளைஞர், கடையில் இருந்த சுமார் 60 சவரன் எடை கொண்ட பிரேஸ்லெட் நகைகளை திருடி எடுத்துச் சென்று விட்டதாக நகைக்கடை உரிமையாளர் சுந்தர் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போலீஸ் விசாரணையில், ரோகித் ராஜஸ்தானை சேர்ந்த இளைஞர் என்பதால், சொந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற நம்பிக்கையில் விசுவாசமாக வேலை பார்ப்பார் என நினைத்து கடந்த ஆண்டு இவருக்கு கடையின் உரிமையாளர் சுந்தர் வேலை கொடுத்துள்ளார். ஆறு மாதம் மட்டுமே வேலை பார்த்த ரோகித் சம்பளம் வாங்கிக் கொண்டு, தனது அம்மாவுக்கு உடல் நலமில்லை எனக் கூறிவிட்டு ராஜஸ்தான் சென்றவர் திரும்பி வராமல் இருந்துள்ளார். பின்னர், மீண்டும் கடந்த வாரம் வந்து கடையின் உரிமையாளரை சந்தித்து வேலை கேட்டுள்ளார். அவருக்கு மீண்டும் வேலை கொடுத்து கடையை பார்த்துக் கொள்ளும்படி உரிமையாளர் சுந்தர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், நேற்று இரவு பத்து மணி அளவில் கடை பூட்டிவிட்டு சாவியை உரிமையாளரிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டதாக புறப்படும் நிலையில், இன்று கடைக்கு வராததால் சந்தேகம் அடைந்த கடையின் உரிமையாளர், ரோஹித்தை செல்போனில் அழைக்க அவரது செல்ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் ஆகி உள்ளது. கடையைத் திறந்து லாக்கரில் இருந்து நகைகளை எடுத்து ஷோ – கேஸில் வைக்கும் போது லாக்கரில் இருந்த சுமார் 60 சவரன் பிரேஸ்லெட் காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடையிலிருந்து சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது, கடையை பூட்டுவதற்கு முன்பு நகைகளைத் திருடி பைக்குள் வைத்துக் கொண்டு ரோஹித் அங்கிருந்து சென்றது தெரியவந்தது.

இதையடுத்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் நகைக் கடை உரிமையாளர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், நகைகளுடன் தப்பிச் சென்ற ஊழியர் ரோஹித்தைத் தேடி வருகின்றனர். ரயில் மூலம் சொந்த ஊரான ராஜஸ்தான் சென்று இருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார் அவரைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

வீட்டின் பூட்டை உடைக்காமல் கொள்ளையர்களின் கைவரிசை…

MUST READ