Homeசெய்திகள்அரசியல்பாமகவின் பரிதாப நிலை.. அன்புமணி ஆதரவாளரை கிண்டல் செய்து வீடியோ வெளியிட்ட ராமதாஸ் அணி...

பாமகவின் பரிதாப நிலை.. அன்புமணி ஆதரவாளரை கிண்டல் செய்து வீடியோ வெளியிட்ட ராமதாஸ் அணி…

-

- Advertisement -

பாமக வழக்கறிஞர் பாலுவை விமர்சித்து புதியதாக சமூகநீதிப் பேரவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட கோபு பாடிய பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.பாமகவின் பரிதாப நிலை.. அன்புமணி  ஆதரவாளரை கிண்டல் செய்து வீடியோ வெளியிட்ட ராமதாஸ் அணி...

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே மோதல் போக்கு நீட்டித்து வருகின்றது, அக்கட்சியின் தலைவர் அன்புமணிக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நிர்வாகிகளை டாக்டர் ராமதாஸ் கட்சி பொறுப்பிலிருந்து தொடர்ந்து நீக்கிவருகிறார்.

அதேபோன்று தந்தை நீக்கி வரும் நிர்வாகிகளை அன்புமணி மீண்டும் இணைத்து அதே பதவிக்கு கடிதம் வழங்கி வருகிறார்.

இந்நிலையில் கட்சியின் சமூக நீதிப் பேரவைத் தலைவராக இருந்து வந்த வழக்கறிஞர் பாலு மற்றும் 20 மாவட்டத் தலைவர்கள், செயலாளர்களை பொறுப்பில் இருந்து டாக்டர் ராமதாஸ் நீக்கியுள்ளார். வழக்கறிஞர் பாலுவிற்கு பதில் அந்த பதவியில் சமூகநீதிப் பேரவைத் தலைவராக கோபுவை நியமனம் செய்துள்ளாா். அதை தொடர்ந்து புதியதாக பொறுப்பேற்ற பாபு, பாலுவை விமர்சித்து பாடிய பாடல் தற்போது வைரலாகி வருகிறது. தமிழக அரசியலில் பல போராட்டங்களை நடத்தி, வன்னியர் சமூக மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று வளர்ந்துள்ள பாமகவின் நிலைமை பரிதாபமான சூழலை நோக்கி சென்றுக் கொண்டிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் என்.கே.மூர்த்தியிடம் கேட்டபோது, வழக்கறிஞர் பாலு பாமகவின் முக்கிய நபர்களில் ஒருவர். அவர் உயர்நீதிமன்றத்தில் தனக்கென்று ஒரு இடத்தை வைத்திருப்பவர். அவர் வகித்து வந்த பதவியில் கோபி என்பவரை டாக்டர் ராமதாஸ் நியமனம் செய்துள்ளார். வழக்கறிஞர் பாலு இருந்த இடத்தில் கோபியை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

கட்சியில் ஒருவருக்கு பதவி வரும் போகும். அது இயல்பானது. அதற்காக இப்படி பாட்டுப்பாடி சமூக வலைத்தளங்களில் பரப்புவது அந்த பதவிக்கு அழகானது அல்ல என்று தெரிவித்தார்.

சமஸ்கிருத பண்பாட்டை நிறுவத் துடிக்கும் பாஜக அரசு தமிழரின் பண்பாட்டிற்கு எதிரானது – வைக்கோ ஆவேசம்

MUST READ