Homeசெய்திகள்அரசியல்முருக பக்தர்கள் மாநாட்டை அரசியலாக்கும் பாஜக - சண்முகம் குற்றச்சாட்டு

முருக பக்தர்கள் மாநாட்டை அரசியலாக்கும் பாஜக – சண்முகம் குற்றச்சாட்டு

-

- Advertisement -

முருக பக்தர்கள் மாநாடு நடத்துவதில் தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கம் இருப்பதாக மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் குற்றம்சாட்டியுள்ளாா். முருக பக்தர்கள் மாநாட்டை அரசியலாக்கும் பாஜக - சண்முகம் குற்றச்சாட்டு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று முதல் வரும் 20 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் பிரச்சார இயக்கம்- நடை பயணம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதன் தொடக்க நிகழ்வாக சென்னை பாரிமுனை அருகில் மாநில செயலாளர் பெ. சண்முகம் தலைமையில் வணிகர்கள், வியாபாரிகளிடம் துண்டு அறிக்கை கொடுத்து பரப்புரை தொடங்கினர்.

மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழக மக்களின் வாழ்வாதாரம், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள்  கோரிக்கைக்கு கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மத்திய அரசு வக்பு சட்டத்தின் மூலம் இஸ்லாமிய சொத்துக்களை முடக்க நினைப்பதை கைவிட வேண்டும்.

விவசாயத்துக்கு ஒதுக்கும் நிதியை மத்திய அரசு குறைப்பதால் தமிழக  விவசாயிகள் பாதிக்கப்படுவதாக முழக்கம் எழுப்பினர். மேலும்,மத்திய அரசு தொழிலாளர்களுக்கு விரோதமாக சட்டங்களை நாடாளுமன்றத்தில் கொண்டு வருவதை நிறுத்த வேண்டும் என்றனர்.

அதேபோல் திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக  நிறைவேற்ற வேண்டும். வீட்டு வரி உயர்வு, சொத்து வரி உயர்வை கைவிட வேண்டும்.  மாதம்தோறும் மின் கணக்கீடு செய்யும் நடைமுறை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில செயலாளர் பெ.சண்முகம், முருக பக்தர்கள் மாநாடு பா.ஜ.க திட்டத்தின்படி தான் தமிழகத்தில்  நடத்துகின்றனர். இது அரசியல் மாநாடு என்றும், இதை பயன்படுத்தி பெரிய கலவரம் ஏற்படுத்த திட்டமிடுகிறார்கள் என நினைக்க தோன்றுவதாகவும், இதை மாநில அரசு கவனமாக கையாள வேண்டும் என்றார்.

அனைத்து சாதியினர் அர்ச்சகர் ஆக வேண்டும் என்பதில் வழக்கு தொடுத்த நேரத்தில் ஆகம விதி என பா.ஜ.க எதிர்த்தது. ஆனால் இப்போது முருக வழிபாடு பொது இடத்தில் நடத்துவதில் ஆகம விதி பாதிக்காதா என கேள்வி எழுப்பினார்.

மேலும் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த அவர், சிபிஎம் வலுவாக இருக்கும் மாவட்டமான குமரி, திருப்பூர் போன்ற சட்டமன்ற தொகுதியில்  போட்டியிடவில்லை. அந்த இடத்தில் தங்களுக்கான வாக்குகள் சாதகம்.  அதனால் தற்போது வாக்கு சதவீதம் குறைவாக இருப்பதை ஒப்பிடுவது சரியல்ல என்றார்.

அதேபோல் வரும் தேர்தலில் கூடுதல் தொகுதிகள் திமுக கூட்டணியில் பெருவது கட்சியின் விருப்பம் என்றும், அனைத்து தோழமை கட்சிகளும் கூடுதல் தொகுதிகள் கேட்பது விருப்பம் தான் யாரும் குறைத்து கேட்கமாட்டார்கள். அதேபோல், திமுக தலைமை இதில் பொருத்தன்மையாக முடிவை எடுப்பார்கள் என்றார்.

அதிமுக- பா.ஜ.க கூட்டணி தோற்கடிக்க வேண்டும் என்பது இலக்கு என்றும் இதே போல கூடுதல் தொகுதிகள் கேட்பதும் நியாயமான விருப்பம் என்றும் அவர் கூறினார்.  கீழடி ஆராய்ச்சி அறிக்கையை மாற்றி கொடுக்க வேண்டும் என ஒன்றிய அரசு நினைப்பது ஏற்க கூடியது அல்ல எனவும் விமர்சித்துள்ளாா்.

மகளிர் உரிமைத் தொகை: துணை முதல்வர் வெளியிட்ட புதிய அப்டேட்!

MUST READ