அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக விமான போக்கவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாய்டு விளக்கம் அளித்துள்ளாா்.குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியாவின் AI171 எனும் போயிங் 787 ட்ரீம் லைனர் வகை பயணிகள் விமானம் 2025 ஜூன்“13-ம் தேதி பகல் 1.39 மணியளவில் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களிலேயே விமானம் கட்டுப்பாட்டை இழந்து, மெகானி நகரில் உள்ள மருத்துவக்கல்லூரியின் உணவகக் கட்டத்தின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கிய உள்ளதாக விமான போக்கவரத்து துறை அமைச்சர் கூறியுள்ளாா். மேலும், இது குறித்து அவா் விளக்கம் அளித்துள்ளாா். அதில்,” அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் 650 அடி உயரத்தை எட்டியதும் விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குளான இடத்தில் மீட்பு பணிகள் நடைபெறுகின்றன. விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் வகையில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க உள்துறைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழுவை ஒன்றிய அரசு அமைத்து உரிய விசாரணை மேற்கொண்டுள்ளது. கண்டறியப்பட்ட கருப்பு பெட்டியில் பதிவாகியுள்ள உள்ள தகவல்களை ஆய்வு செய்தால், விமான விபத்துக்கான உண்மையான காரணம் முழுமையாக தெரியவரும் என எதிர்பாா்க்கப்படுகிறது என தெரிவித்தாா். இந்த விபத்து தொடர்பான உயர்மட்ட குழுவின் விசாரணையை 3 மாதங்களில் முடிக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. விமான விபத்துக்கான காரணத்தை கண்டறிய சர்வதேச பாதுகாப்பு நிபுணர்களின் உதவியும் கோரப்பட்டுள்ளது. மேலும், போயிங் 787 ரக விமானங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது” என்று விளக்கமளித்துள்ளாா்.