spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்பணிச்சுமையினால் இளைஞர் தற்கொலை!

பணிச்சுமையினால் இளைஞர் தற்கொலை!

-

- Advertisement -

இளைஞரின் தற்கொலைக்கு நீதி கேட்டு குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டது.பணிச்சுமையினால் இளைஞர் தற்கொலை!

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை சேர்ந்தவர் ரஞ்சித்(22). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் மாம்பாக்கம் சிப்காட்டில் செயல்பட்டு வரும் தனியார் கண்ணாடி உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். ரஞ்சித், உணவு இடைவெளி கூட வழங்காமல், தொடர்ந்து பணி அழுத்தம் தந்ததால், ஸ்ரீபெரும்புதூரில் அவர் குடியிருந்து வந்த வாடகை வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்ய ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் உள்ளது. தான் தற்கொலை செய்து கொள்வதற்கு மாருதி எண்டர்பிரைசஸில் வேலை செய்யும்  மாரியப்பன், ஐயப்பன் கொடுத்த பணி சுமை மற்றும் கொலை மிரட்டல் விடுத்தது தான் காரணம் என அவர் எழுதி வைத்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.பணிச்சுமையினால் இளைஞர் தற்கொலை!இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரணை நடத்தி, தலைமறைவாக உள்ள ஐயப்பன், மாரியப்பனை தேடி வருகின்றனா். இதற்கிடையே இளைஞரின் தற்கொலைக்கு நீதி கேட்டு செங்கல்பட்டில் இருந்து அவரது உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறவினர்கள் ஒரு கட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையம் எதிரே இருக்கும் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.பணிச்சுமையினால் இளைஞர் தற்கொலை!இளைஞரின் தற்கொலைக்கு நீதி வேண்டும் என்றும் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டி வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  உறவினா்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர் இளைஞர் தற்கொலைக்கு நீதி கேட்டு உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரியாரின் சிந்தனையாளர் இயக்குநர் வேலு பிரபாகரன் மரணம்

we-r-hiring

MUST READ