திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.10,000த்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
திண்டுக்கல் – நிலக்கோட்டை மலர் சந்தைகயில் பூக்கலின் வரத்து கடுமையாக குறைந்துள்ளதால் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக மல்லிகைப்பூ விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து, ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.10000 முதல் ரூ.11,000 வரை விற்பனை செய்யபப்டுகிறது.

நிலக்கோட்டை மலர் சந்தை தமிழ்நாட்டின் முக்கிய மல்ர் வர்த்தக மையங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஆனால் சமீப நாட்களாக ஏற்பட்ட வானிலை மற்றும் விலைச்சல் குறைவு காரணமாக சந்தைக்கு பூக்களின் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக மல்லிகைப்பூ விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
மேலும், ஒரு கிலோ முல்லைப்பூ ரூ.1800க்கும், பிச்சிப்பூ ரூ.1600க்கும் விறபனை செய்யபப்டுகிறது. பூங்களின் இந்த விலை உயர்வால் பூ வியாபாரிகளும், சில்லறை வற்பனையாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடந்து பூக்களின் வரத்து குறைந்ததால் மல்லிகைப்பூ உள்ளிட்ட பூக்களின் விலை இன்றும் பல மடங்கு உயரும் என வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


