spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவிஜய் பிரச்சார வாகன ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!!

விஜய் பிரச்சார வாகன ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!!

-

- Advertisement -

கரூர், சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாகன ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டது.விஜய் பிரச்சார வாகன ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!!கரூரில், கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த அக்டோபர் 16-ம் தேதி முதல் கரூரில் உள்ள சுற்றுலா மாளிகை தற்காலிக சிபிஐ அலுவலகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக வேலுச்சாமிபுரம் பகுதி பொதுமக்கள்,  தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்கள், உயிரிழந்தவரின் குடும்பத்தினர், காவல்துறையினர், தவெக நிர்வாகிகள்  என பல்வேறு தரப்பினரிடம் தொடர்ந்து சி.பி.ஐ. விசாரணை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

we-r-hiring

இந்நிலையில், நேற்று மத்திய  உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தடயவியல் துறை அதிகாரிகளும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவ அதிகாரிகள் 10க்கும் மேற்பட்டோர், கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியான சம்பவ இடத்தில் உயர்ரக தொழில்நுட்ப கேமிராவுடன் விசாரணை மேற்கொண்டனர். இன்று தான்தோன்றி மலை சிபிஐ அலுவலகத்தில் விஜய் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய வாகனம் கொண்டுவரப்பட்டு சிபிஐ அதிகாரிகள் மற்றும் தடவியல் துறை அதிகாரிகள் வாகனத்தை பார்வையிட்டு வருகின்றனர்.

மேலும் வாகன ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 12ஆம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் வழங்கிய நிலையில் தற்போது சிபிஐ விசாரணை தீவிரமெடுத்துள்ளது.

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ… தற்காலிக பாதுகாப்பு சான்றிதழ் வழங்கிய ரயில்வே வாரியம்…

MUST READ