தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலினுக்கு ஆம் ஆத்மி கட்சித்தலைவா் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளாா்.
மதுபான கொள்கை வழக்கில் விடுவிக்கப்பட்டதற்காக கெஜ்ரிவாலுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தாா். அரசியல் பழிவாங்கலுக்கு சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளின் நோ்மையை அடமானம் வைக்கக் கூடாது எனவும் முதல்வா் ஒன்றிய பாஜக அரசு மதுபான கொள்கை வழக்கின் தீா்ப்புக்காக வெட்கப்பட வேண்டும் எனவும் முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
இந்நிலையில், சிபிஐ வழக்கை எதிா்த்து நாங்கள் நடத்தி வந்த போராட்டத்துக்கு எப்போதும் உறுதுணையாக நின்றதற்கு நன்றி என ஆம் ஆத்மி கட்சித்தலைவா் கெஜ்ரிவால் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளாா்.

மேலும், ஜோடித்து வழக்கு தொடுத்த சிபிஐ அதிகாாிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.


