
தேர்தல் வேட்பு மனுவில் தவறான தகவல் தெரிவித்தது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மலையாளத்தில் புதிய சாதனை படைத்த ‘ஹ்ருதயம்’ படப் பாடல்!
கடந்த 2021- ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வேட்பு மனு பிரமாண பத்திரத்தில் சொத்து விவரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தகவல்கள் தவறாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தேனி மாவட்டம், உத்தமப்பாளையத்தைச் சேர்ந்த ஒருவர், சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.
இந்த புகார் குறித்து விசாரித்த நீதிமன்றம், புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதற்கு தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமியும் வழக்கு தொடர்ந்திருந்தார்.
4 மாதங்களில் 386 அவதூறு வீடியோக்கள் நீக்க கடிதம்
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சேலம் மத்திய குற்றப்பிரிவுக் காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை வரும் ஜூன் 6- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.