spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகர்நாடகாவில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்- வானதி சீனிவாசன்

கர்நாடகாவில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்- வானதி சீனிவாசன்

-

- Advertisement -

கர்நாடகாவில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்- வானதி சீனிவாசன்

கர்நாடகா தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Vanathi srinivasan

கோவை புலியகுளம் அருகே உள்ள அம்மன் குளம் பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கி குடிநீர் இயந்திர திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டு இயந்திர மையத்தை ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “24 மணி நேரமும் ஆரோ தண்ணீரை பெற்றுக் கொள்ளும் தானியங்கி எந்திரத்தை திறந்து வைத்துள்ளோம். இதன் மூலம் சுமார் ஆயிரம் குடும்பங்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இன்று புதிதாக அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். அரசியல் ரீதியாக அவர் அனுபவம் உள்ளவர். சக உறுப்பினராக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

we-r-hiring

கர்நாடகா தேர்தல் கருத்துக் கணிப்புகளை நம்பவில்லை, மக்களை நம்புகிறோம். மக்கள் ஆதரவு பாஜகவிற்கு உள்ளது. கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியமைக்கும். கருத்துக்கணிப்பை வைத்து நேரத்தை மட்டும் போக்கிக் கொள்ளலாம்” என தெரிவித்தார்.

MUST READ