மகளின் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு தற்கொலை செய்துகொண்ட தாய்!
ஆவடி அருகே அண்ணனூர் பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜோதி பாஸ் –ரம்யா தம்பதியினர்.ஜோதி பாஸ் மருத்துவப் பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார்.இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகனும்,10 வயதில் மகளும் உள்ளனர்.
ஜோதி பாஸ் –ரம்யாவுக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை வந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்துள்ளார் ரம்யா.இந்நிலையில் ,ரம்யாவின் மகளுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் தனது குடும்பத்தாருடன் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.பின்னர் ரம்யா தனது தோழி வீட்டிற்குச் சென்று வருவதாக கூறி வெளியேச் சென்றார்.வெகு நேரமாகியும் ரம்யா வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் அவரை தேடினர்.
அண்ணனூர் இரயில் நிலையம் அருகே சென்னையிலிருந்து அரக்கோணம் சென்ற மின்சார இரயில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்ததாக ஆவடி இரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.விரைந்துச் சென்ற போலீசார் அந்த உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மின்சார இரயில் மோதி இறந்த பெண் குறித்து போலீசார் விசாரித்த போது அது ரம்யா என தெரியவந்தது.இந்த தகவலை ரம்யாவின் குடும்பத்தினருக்கு போலீசார் தெரிவித்தனர்.தகவலைக் கேட்ட ரம்யாவின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.மன உளைச்சலில் இருந்த ரம்யா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.மகளின் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.