spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"தி.மு.க. வார்டு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை தேவை"- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

“தி.மு.க. வார்டு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை தேவை”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

-

- Advertisement -

 

"எங்கள் தரப்பு தான் உண்மையான அ.தி.மு.க."- எடப்பாடி பழனிசாமி பேட்டி!
Photo: EPS

மேட்டுப்பாளையம் அ.தி.மு.க. நகரமன்ற உறுப்பினர்களைத் தாக்கிய தி.மு.க. வார்டு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

we-r-hiring

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 40 உயர்வு!

இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேட்டுப்பாளையத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்து தி.மு.க. வார்டு உறுப்பினர்கள், மேட்டுப்பாளையம் நகர மன்ற அவசரக் கூட்டத்தில் கேள்வி எழுப்புவதற்காக தீர்மானித்திருந்த நிலையில், தி.மு.க. நகர மன்ற உறுப்பினர்கள் தன்னிச்சையாக அ.தி.மு.க. வார்டு உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, அனைத்துத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்ததைக் கண்டித்து, அக்டோபர் 31- ஆம் தேதி முதல் நகர மன்றத்தில், 8 கழக நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வந்தனர்.

தொண்டைமான் கிராமசபை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது தாக்குதல் – சீமான் கண்டனம்!!

இந்நிலையில் நேற்று (நவ.02) உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய அ.தி.மு.க. நகர மன்ற வார்டு உறுப்பினர்களையும், இவர்களை பார்வையிடச் சென்ற கட்சியின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், மேட்டுப்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செல்வராஜ், கோவை புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் அருண்குமார் உள்ளிட்ட 100- க்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்களையும் கைது செய்த தி.மு.க.-வின் ஏவல் துறைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேட்டுப்பாளையம் நகர மன்ற வளாகத்திற்குள்ளேயே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க. நகர மன்ற உறுப்பினர்களைத் தாக்கிய, தி.மு.க. நகர மன்ற உறுப்பினர்கள் மீது, மேல் நடவடிக்கை எடுக்காத நகராட்சி ஆணையருக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அ.தி.மு.க. நகர மன்ற உறுப்பினர்களைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தி.மு.க. நகர மன்ற உறுப்பினர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்காத விடியா தி.மு.க. அரசின் காவல் துறைக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, கொலைவெறித் தாக்குதல் நடத்திய தி.மு.க. நகர மன்ற உறுப்பினர்கள் மீது உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க விடியா தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

லாரியை மடக்கிப் பிடித்த மருத்துவ தம்பதிக்கு நேர்ந்த துயரம்!

இல்லையெனில், கோவை புறநகர் வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விடியா தி.மு.க. அரசை எச்சரிக்கிறேன்.” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

MUST READ