spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய  கருக்கா வினோத்தை என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார்!

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய  கருக்கா வினோத்தை என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார்!

-

- Advertisement -

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் போலீஸ் காவலில் விசாரிக்க கருக்கா வினோத்தை என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய  கருக்கா வினோத்தை என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார்!

we-r-hiring

கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு பிரபல ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசிய சம்பவத்தில் கருக்கா வினோத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  இந்த சம்பவத்தில் கருக்கா வினோத்திற்கு பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கலாம் என கருதி இந்த வழக்கு என்.ஐ.ஏ. போலீசாருக்கு மாற்றப்பட்ட நிலையில் கருக்கா வினோத்தை ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனு அளித்திருந்தனர்.

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய  கருக்கா வினோத்தை என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார்!

 

இந்த மனு மீது இன்று விசாரணைக்கு வந்த நிலையில் புழல் சிறையில் இருந்து கருக்கா வினோத்தை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்தனர். போலீஸ் காவல் மனு மீதான மனுவை விசாரித்த நீதிபதி இளவழகன் இந்த மனு மீது மறு விசாரணை 18 ம் தேதி விசாரிப்பதாக அறிவித்ததையடுத்து மீண்டும் கருக்கா வினோத்தை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போலீசார் வேனில் அழைத்துசென்றனர் வழக்கமாக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும் குற்றவாளிகள் கண்ணாடி கதவுகள் கொண்ட வேனில் ஆட்கள் தெரியும்படி அழைத்து வருவது வழக்கம் ஆனால் தற்போது கருக்கா வினோத்தை கண்ணாடி கதவுகளின் உள்பகுதியில் துணியால் ஸ்கிரீன் போட்டு மறைத்தபடி இருந்த வேனில் அழைத்து வந்தனர். பாதுகாப்பு கருதி பிரத்தியேகமாக இது போன்ற வாகனத்தில் அழைத்து வந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ