
தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, 6 ரயில் சேவைகளை முழுமையாக ரத்துச் செய்தது தெற்கு ரயில்வே.

நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!
அதன்படி, சென்னை- நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் இரு மார்க்கங்களிலும் முழுமையாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது. நெல்லை- ஜாம்நகர், திருச்செந்தூர்- பாலக்காடு ரயில்கள் முழுமையாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து செல்லும் குருவாயூர் விரைவு ரயில் முழுமையாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் விரைவு ரயில் முழுமையாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
ரத்துச் செய்யப்பட்டுள்ள ரயில்களுக்கு முன்பதிவுச் செய்தவர்களுக்கு, கட்டணம் முழுமையாகத் திருப்பி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு!
சென்னை- நெல்லை இடையேயான விரைவு ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்திலும், தாம்பரம்- நாகர்கோவில் இடையேயான மற்றொரு விரைவு ரயில் கொடைரோடு ரயில் நிலையத்திலும், தாம்பரம்- நாகர்கோவில் இடையேயான விரைவு ரயில் திருச்சி ரயில் நிலையத்திலும், சென்னை எழும்பூர்- கொல்லம் இடையேயான விரைவு ரயில் விருதுநகர் ரயில் நிலையத்திலும் நிறுத்தப்பட்டுள்ளன.