கனமழை, வெள்ளப் பாதிப்புக் காரணமாக, நெல்லை, தூத்துக்குடியில் நாளை (டிச.20) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் மாற்றம்…..ரசிகர்கள் அதிர்ச்சி!
கனமழை மற்றும் வெள்ளப் பாதிப்புக் காரணமாக, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்திய விமானப் படை, இந்திய கடற்படை, தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புப் படையினர் உள்ளிட்டோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமைச்சர்களும், அரசு உயரதிகாரிகளும் நிவாரண பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். இந்தச் சூழலில், நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை (டிச.20) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நாளை நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலம் போன வீரர்! – யார் தெரியுமா?
அதேபோல், தூத்துக்குடி மாவட்டத்திலும் நாளை (டிச.20) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.