Homeசெய்திகள்தமிழ்நாடுஅயோத்தி ராமர் கோயில் விழா நேரலை விவகாரம்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அண்ணாமலையின் குற்றச்சாட்டும்,...

அயோத்தி ராமர் கோயில் விழா நேரலை விவகாரம்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அண்ணாமலையின் குற்றச்சாட்டும், அமைச்சர் சேகர்பாபுவின் விளக்கமும்!

-

- Advertisement -

 

அயோத்தி ராமர் கோயில் விழா நேரலை விவகாரம்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அண்ணாமலையின் குற்றச்சாட்டும், அமைச்சர் சேகர்பாபுவின் விளக்கமும்!

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற அயோத்தி ராமர் கோயிலின் மஹா கும்பாபிஷேக விழா நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், மத்திய நிதியமைச்சருமான நிர்மலா சீதாராமன், “எல்இடி தொழில் செய்யும் வியாபாரிகள் அனைவரும் அரசின் அடக்குமுறையால் கஷ்டப்பட்டார்கள். செய்யும் முறையை மாற்றிக் கொள்ளாமல் மக்களைக் கஷ்டப்படுத்தி இருக்கிறது தி.மு.க. அரசு.

விமானத்தில் பறந்து 10 ஆண்டு கால ஆசையை நிறைவேற்றிய கிராம மக்கள்!

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் தெரிவித்த பிறகே எல்இடியில் பார்க்க முடிந்தது. இந்துக்களின் உரிமையைப் பறிக்க முயற்சி நடந்தால் அமைதியாக, சட்டப்பூர்வமாக போராடுவோம். இந்து மக்களின் உரிமையைப் பறிக்க முயன்றால் சாலையில் இறங்கிக் கத்தும் செயல்களில் ஈடுபட மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் மஹா கும்பாபிஷேக நேரலைக்கு தடை விவகாரம் குறித்து பேசிய பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, “கோயிலுக்கு சென்று சாமி கும்பிட அனுமதி வாங்க சொல்கிறார்கள்; குழந்தை ராமரின் பிரதிஷ்டையை நேரலை செய்ய அனுமதி வாங்க சொல்கிறார்கள்; இதனால் தான் சொல்கிறோம்; இந்து சமய அறநிலையத்துறை தேவையில்லாத அமைப்பு. பா.ஜ.க. தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரும் போது அந்தத் துறை இருக்காது” எனத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல்- அ.தி.மு.க. குழு அமைப்பு!

மத்திய அமைச்சர் மற்றும் பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, “கோயில்கள் மீதும், அறநிலையத்துறையின் மீதும் அவதூறு பரப்புகின்றனர். மத்திய நிதியமைச்சரே இவ்வாறு செய்வது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. மக்களவைத் தேர்தல் வரவிருப்பதால் இதுபோன்ற தரம் தாழ்ந்த அரசியல் பா.ஜ.க. ஈடுபடுகிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

MUST READ