spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்டிஜிபி-ன் வாட்ஸ்அப் போட்டோவுடன் போலியான வாட்ஸ்அப் டிபியை உருவாக்கி சைபர் மோசடி

டிஜிபி-ன் வாட்ஸ்அப் போட்டோவுடன் போலியான வாட்ஸ்அப் டிபியை உருவாக்கி சைபர் மோசடி

-

- Advertisement -

 டிஜிபி-ன் வாட்ஸ்அப் போட்டோவுடன் போலியான வாட்ஸ்அப் டிபியை உருவாக்கி சைபர் மோசடி

தெலுங்கானா மாநிலத்தில் தொழிலதிபர் மகளுக்கு அம்மாநில டிஜிபி ரவி குப்தாவின் புகைப்பட டி.பி.யுடன் கூடிய அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பைப் எடுத்த பின் போதைப்பொருள் வழக்கில் கைது செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். அதற்கு” நான் ஒன்றும் செய்யவில்லை” என்றார். ஆனால் ஆதாரம் இருப்பதாக கூறி மேலும் மிரட்டியுள்ளனர்.

we-r-hiring

தெலுங்கானா டிஜிபி ரவி குப்தாவின் வாட்ஸ்அப் டிபி உண்மையானது என நம்பி அந்த இளம்பெண் பீதியடைந்திருக்கிறார். இதனால் பேச்சில் தடுமாற்றம் அடைவதை உணர்ந்த சைபர் குற்றவாளிகள் இந்த வழக்கில் இருந்து விடுபட உடனடியாக ₹.50 ஆயிரத்தை அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த இளம்பெண் உடனே போன் அழைப்பை துண்டித்துவிட்டு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணின் போனுக்கு வந்த வாட்ஸ்அப் அழைப்பை ஆய்வு செய்தனர். அதில் +92 குறியீட்டுடன் வாட்ஸ்அப் அழைப்பு வந்ததாக அவர் தெரிவித்திருக்கிறார். இந்த +92 குறியீட்டை ஆய்வு செய்த சைபர் க்ரைம் போலீசார் இது பாகிஸ்தானின் குறியீடு என கண்டறிந்தனர்.

இது போன்ற அழைப்புகளைத் எடுக்க வேண்டாம், அவர்களுடன் வீடியோ கால்களில் பேசுவது போன்றவற்றை செய்யாமல் கட் செய்ய வேண்டும். அத்தகைய எண்களைத் எடுக்காமல் புறகணிக்க வேண்டும் என போலீசார் கேட்டு கொண்டனர்.

MUST READ