ஆவடியில் இந்து கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பணம் எண்ணும் இயந்திரத்தில் பாம்பு புகுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆவடி அடுத்த பட்டாபிராம், ஐ. ஏ. எப்., சாலை, இந்து கல்லூரி வளாகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்படுகிறது.
நேற்று முன்தினம் மாலை, கேஷியர் அறையில் இருந்த பணம் எண்ணும் இயந்திரத்தில் இருந்து பாம்பு ஒன்று வெளியேறியது. அதிர்ச்சி அடைந்த வங்கி நிர்வாகம், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தது.
ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் ‘டபுள் இஸ்மார்ட்’ ….. முடிவடைந்த படப்பிடிப்பு!
சம்பவ இடத்திற்கு வந்த ‘ஆவடி பல்லுயிர் பாதுகாப்பு நிறுவனத்தின்’ குழுவினர் இயந்திரத்தில் இருந்து பாம்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்.
மூன்றடி நீளம் கொண்ட அந்த பாம்பு கொம்பேறி மூர்க்கன் என தெரிந்தது. விஷமற்ற இந்த பாம்பு, மரம் ஏறும் தன்மை கொண்டது. இதனால், மரத்தில் இருந்து ஸ்டோர் ரூம் வழியாக உள்ளே புகுந்து பணம் எண்ணும் இயந்திரத்தில் புகுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.