Homeசெய்திகள்கட்டுரைநேரம் குறித்த உச்சநீதிமன்றம்... மூட்டை கட்டும் ஆளுநர்... உண்மையை உடைக்கும் ராஜகம்பீரன்! 

நேரம் குறித்த உச்சநீதிமன்றம்… மூட்டை கட்டும் ஆளுநர்… உண்மையை உடைக்கும் ராஜகம்பீரன்! 

-

- Advertisement -

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்படி செயல்விட வில்லை என்பதை உச்சநீதிமன்றமே தெரிவித்துவிட்டதாக அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆளுநருக்கு எதிரான வழக்கு விசாரணை மற்றும் தவெக தலைவர் விஜயின் அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பாக அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், தன்னையே ஒரு எம்ஜிஆர் ஆக கருதிக் கொள்ளக்கூடிய இடத்தில் இருந்துகொண்டு, பனையூர் பங்களாவுக்குள்ளேயே எம்ஜிஆர் போட்டாவை வைத்து ரொம்ப பாதுகாப்பான அரசியலை செய்து கொண்டிருக்கிறார். அவர் எப்போதுதான் கள அரசியலுக்கு வருவார் என எதிர்பார்த்த நிலையில், நேராக பரந்தூரில் போராடும் மக்களை சந்திக்க முடிவு எடுத்துள்ளார். அதுவும் அந்த மக்கள் போட்டம் 900 நாட்களை கடந்த பின்னர் தான் அவர்களை சந்திக்க செல்கிறார். தவெகவின் கட்சி நிலைப்பாட்டில் ஒன்று பரந்தூர் விமான நிலையம் அமைக்கக்கூடாது என்பதாகும். அப்படி என்றால், தவெகவின் கொள்கை தலைவரான பெரியார் மீது சீமான் தொடர்ந்து அவதூறுகளை பரப்பியபோது விஜய் எந்த எதிர்வினையும் ஆற்றாதது ஏன்? பரந்தூர் விமான நிலையத்தை அமைக்கும் அனைத்து அதிகாரமும் மத்திய அரசுக்குதான் உள்ளது. மாநில அரசு அவர்கள் தேர்வு செய்த 3 இடங்களை மட்டுமே மத்திய அரசிடம் காட்டுகிறது. பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராட வேண்டும் என்றால் அவர்கள் மத்திய அரசை எதிர்த்துதான் போராட வேண்டும். மாநில அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாகத்தான் மாநில அரசு செயல்படும். இந்த போராட்டத்தை மத்திய அரசுக்கு எதிரான போராட்டமாக விஜய் மாற்றினால்தான் அது சரியாக இருக்கும்.

நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து அஜித் பட நடிகையின் கருத்து!

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் நடைபெற்று வரும் டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டத்திற்கு விஜய் செல்லாதது ஏன்? அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் கருத்து தெரிவித்த பின்னர் ஒரு வாரம் கழித்து விஜய் ஆளுநரை சென்று சந்தித்தார். அதேபோல் பரந்தூருக்கு 900 நாட்கள் கழீத்துதான் களத்திற்கு செல்கிறார். இதேபோல், தமிழ்நாட்டின் தீமைகளுக்கு எதிராக எங்கெங்கு போராட்டங்கள் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் விஜய் செல்வாரா?. அவரது நோக்கம் என்பது திமுக அரசை குறிவைத்துதான் உள்ளது. அவரது முதல் மாநில மாநாடு, அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பார்த்தால் அவர் மேம்போக்காக மத்திய அரசை தொட்டுவிட்டு, திமுகவைதான் அடிப்பார். தமிழ்நாட்டில் திமுக எதிர்ப்பில் ஏராளமான கட்சிகள் உள்ளன. அந்த இடத்திற்குதான் விஜய் வந்து சேர்ந்துள்ளார்.

நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தனங்களுக்கு தெரியும் என திமுக சொல்வதில் தவறு இல்லை. தேர்தலில் திமுக வென்றால் என்பது திமுக இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால்தான் நீட் தேர்வு ரத்து செய்து சாத்தியம். அது சாத்தியம் ஆகததால் திமுக சட்ட ரீதியிலான போராட்டத்தை நடத்தி வருகிறது. கையெழுத்து இயக்கம் நடத்துகின்றனர். மக்களாட்சியில் ரகசியத்திற்கு இடமில்லை. திமுகவுக்கு எதிராக விஜய் நிலைப்பாடு எடுப்பதில் தவறு இல்லை. பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் உண்மையிலேயே மக்களுக்காக அவர் போராடுவார் என்றால் அதில் முடிவெடுக்க வேண்டிய இடத்தில் மத்திய அரசு உள்ளது. அப்போது நீங்கள் மத்திய அரசு, மாநில அரசு இரண்டுக்கும் எதிராக போராடுவீர்களா? அல்லது மாநில அரசை மட்டும் எதிர்ப்பீர்களா? பாஜக எதிர்ப்பின்போது மென்மையான போக்கையும், திமுகவை எதிர்க்கும்போது கடினமான போக்கையும் விஜய் கடை பிடிக்கிறார்.

அதிமுகவுடன் கூட்டணி இல்லை - தவெக அறிவிப்பு

மதவாத சக்திகளை எதிர்க்க விஜய் இந்தியா கூட்டணிக்கு வர வேண்டும் என செல்வபெருந்தகை அழைப்பு விடுக்கிறார். மதவாதத்தை நாங்கள் எதிர்ப்போம் என கூறும் விஜய், அதனை செய்யும் பாஜக எதிர்ப்போம் என வெளிப்படையாக சொல்ல ஏன் தைரியம் இல்லை. நீங்கள் விஜய் என்றால், ஆளுநர் மாளிகையில் ஜோசப் விஜய் என்கின்றனர். அப்போது பிளவுவாத அரசியல் செய்வது யார் என்று தெரிகிறதா? பிளவுவாத அரசியலுக்கு எதிராக நாடு முழுவதும் இந்தியா கூட்டணிதான் போராடி வருகிறது. அப்படி என்றால் விஜய் இந்தியா கூட்டணி பக்கம் நின்றுதான் போராட வேண்டும். விஜய்க்கு சினிமாவில் ரசிகர்கள் இருக்கலாம். அரசியலில் இப்போது தான் பால்வாடி பாப்பா மாதிரிதான். அரசியலில் எத்தனையோ முதிர்ச்சி பெற்றவர்கள் இருக்கிறார்கள். ரசிகர்களை நம்பி கட்சி தொடங்கிய விஜயும், மொழிப் போராட்டத்தில், சமுகநீதி போராட்டத்தில் பல மாணவர்கள், இளைஞர்களின் உயிரை கொடுத்து உருவாக்கப்பட்ட திமுகவும் ஒன்றா?

எம்ஜிஆர் ஏன் வெல்லப்பட முடியாத தலைவராக இருந்தார் என்றால் அவருக்கு திமுகவில் 20 ஆண்டுகால அரசியல் அனுபவம் இருந்தது. விஜய்க்கு ஏதாவது அரசியல் அனுபவம் உள்ளதா?. விஜயை எம்ஜிஆருடன் ஒப்பிடக்கூடாது. எம்ஜிஆர் உருவாக்கியது என்பது லட்சியவாத கோட்பாட்டு சினிமாவை உருவாக்கினார். திமுகவின் கொள்கைகள், கோட்பாடுகளை உள்வாங்கி கொண்டவர் எம்ஜிஆர். அவர் கலைஞர் மீதுதான் விமர்சனம் வைத்தார். ஆனால் கட்சி கோட்பாடுகளுக்கு எதிராக விமர்சனம் வைக்கவில்லை. இடஒதுக்கீட்டிற்கு சட்ட பாதுகாப்பு வழங்கி ஜெயலலிதா சமூகநீதி காத்த வீராங்கனை என்ற பட்டம் பெற்றார். இருவரும் திராவிட கொள்கைகளை தான் பின்பற்றினர். எம்ஜிஆர், அதிமுகவில் இரண்டாம் கட்ட தலைவர்களை வளர்த்து எடுத்தார். ஆனால் ஜெயலலிதா திருநாவுக்கரசர், கே.கே.எஸ்.எஸ்.ஆர் போன்ற இரண்டாம் கட்ட தலைவர்களை வளர்த்தெடுக்கவில்லை. அதனால் தான் அதிமுக இன்று பின்னடைவை சந்தித்து உள்ளது. அதே தவறை தான் விஜய் செய்கிறார். விஜயிடம் தத்துவ தலைமை உள்ளதா? தத்துவம் இல்லாத கட்சி, கொள்கை இல்லாத கட்சி கரைசேராது என்பதற்கு தேமுதிக ஒரு உதாரணம். எந்த பிரச்சினை என்றாலும் விஜயகாந்த் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்குவார். விஜய் இறங்குவாரா?. ஆனால் அவர் பாதுகாப்பு கேட்டு காவலதுறையிடம் மனு போட்டு கொண்டிருக்கிறார். மக்களை சந்திக்க தயக்கம் இல்லாமல் போய் நிற்க வேண்டும். நீங்கள் நேசிக்கும் மக்கள் உங்களை என்ன செய்துவிட போகிறார்கள். ராகுல்காந்தி என்ன பாதுகாப்பை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கீறாரா? இது நீங்கள் இன்னும் அரசியலுக்கு தகுதியாகவில்லை என்றுதான் காட்டுகிறது.

ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு!
File Photo

நல்ல மாட்டிற்கு ஒரு சூடு என்பார்கள். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காததால் ஏற்கனவே பல முறை உச்சநீதிமன்றம் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்துள்ளது. அனைத்து விஷயங்களிலும் அவர் அவமானப்பட்டுள்ளார். மக்களால தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் நிறைவேற்றுகின்ற மசோதாக்களுக்கு, சித்த மருத்துவ பல்கலை. மசோதா, துணை வேந்தர் நியமனம், படிக்கக்கூடிய மாணவர்களுக்கு பட்டம் வாங்க முடியாதது போன்ற நிர்வாக சீர்கேடுகளுக்கு அவர் காரணமாக உள்ளார். தமிழர்களின் வரிப்பணத்தில் வாழ்ந்துகொண்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அவர் தொடர்ந்து அவமதிப்பது மக்களை அவமதிப்பது போன்று தான். காவி நிறத்தில் திருவள்ளுவரை வைத்து கொண்டாடலாமா? தமிழ் அறிந்தவர்கள் யாராவது திருவள்ளுவருக்கு காவி பூசியதை யாராவது ஒருவராவது ஒப்புக்கொண்டு உள்ளனரா? அப்போது நீங்கள் பெயிண்ட் அடிக்க காரணம் என்ன? எங்காவது இந்து என்கிற சொல்லுக்கு அவர் மேற்கோள் காட்டியுள்ளரா? சமயம் சார்ந்து ஏதாவது பேசியுள்ளாரா? அது உலகத்திற்கே பொதுமறை.

governor

இந்த மண்ணிற்கு கிறிஸ்துவத்தை பரப்ப வந்தவர்கள் கூட தமிழ் இலக்கியத்தை படித்துவிட்டு தன்னுடைய பெயரையே வீரமாமுனிவர் என்று மாற்றிக்கொண்ட வரலாற்றை படித்துள்ளோம். ஜி.யு.போப் தனது கல்லறையில் ஒரு தமிழ் மாணவன் என்று எழுத சொன்னார். அவர்கள் எங்காவது மதவாத சிந்தனையுடன் நடந்து கொண்டனரா? வெளிநாட்டில் இருந்து சமயத்தை பரப்ப வந்தவர்கள் கூட இதனை ஒரு சமய நூலாக மாற்ற முயலவில்லை.  கீழடியில் தொன்மையான நாகரிகத்தை, 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர் வாழ்வியலில் சமயம் சார்ந்த ஒன்றும் கிடைக்கவில்லை. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று உலக நேயத்தை சொல்லும் கவிதை எழுதியவர்கள் தமிழர்கள். திருவள்ளுவருக்கு எப்படி காவி சாயம் பூசுகிறார்களோ, பல்கலை.களில் ஆர்எஸ்எஸ் கோட்பாடு உடைய பாடத்திட்டங்கள் மாற்றப்பட வேண்டும் என எண்ணுகின்றனர். அதற்கான துணை வேந்தர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பது போன்ற உள்நோக்கத்திற்காகதான் மசோதாக்களை கிடப்பில் போடுகிறார். இந்துத்துவ சிந்தனையை ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு செய்ய வேண்டும். தமிழர்களின் வரிப்பணத்தை வாங்கிகொண்டு ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்துகொண்டு வேலை பார்ப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இது உத்தரபிரதேசமோ, மகாராஷ்டிராவோ கிடையாது. மதவாதம் என்ற நச்சுவிதையை இந்த மண்ணில் யாரும் விதைக்க முடியாது. அதற்கு ஆளுநர் தொடர்ந்து முயற்சிக்கிறார்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் நீங்கள் செயல்பட மறுத்தால், அதற்கான அதிகாரத்தை நாங்கள் கையில் எடுத்துக்கொள்வோம் என்று சொல்வதன் முலம் இவர் சரியாக செயல்படவில்லை என கூறிவிட்டார்கள். ஒரு வாரம் கெடு விதித்துள்ளார்கள் என்று சொன்னால் நிர்வாக சீர்கேட்டை நிகழ்த்திக்கொண்டிருக்கிற நீங்களாகவே வெளியேறி விடுங்கள் என்று சொல்லிவிட்டார்கள். அவர் சட்டமன்றத்தை விட்டு வெளியேறுவதற்கான கால கட்டம் அல்ல தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவதற்கான காலம் வந்துவிட்டது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ