spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிஆவடி நந்தவனமேட்டுர் பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ

ஆவடி நந்தவனமேட்டுர் பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ

-

- Advertisement -

ஆவடி நந்தவனமேட்டுர் பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ

ஆவடி நந்தவனமேட்டூர் பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ பற்றி எரிந்தது. நந்தவனமேட்டூர் வ.உ.சி தெருவில் வசித்துவரும் பிரேமா என்பவர் இரவு உணவு செய்ய குக்கரில் அரிசி இட்டு சிலிண்டரை பற்றவைத்துவிட்டு வெளியே வந்து உள்ளார். சிறிது நேரம் கழித்து சென்று பார்த்த பிரேமாவுக்கு அதிர்ச்சி சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது அதனை கண்டு பயந்து அக்கம் பக்கத்தினரை கூச்சலிட்டு அழைத்துள்ளார்.

ஆவடி நந்தவனமேட்டுர் பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ

we-r-hiring

உடனே அருகே உள்ள அருண் பாலாஜி என்பவர் துரிதமாக செயல்பட்டு ஈர அரிசி கோணியை சிலிண்டர் மீது போர்த்தியுள்ளார். தீ அதிலும் கட்டுக்கடங்காமல் எறிந்ததால் அருகே உள்ள திருமண மண்டபத்திற்கு விரைந்து சென்று அங்கு உள்ள தீயணைப்பாணை கொண்டுவந்து வீட்டில் உள்ளே எரிந்து கொண்டிருந்த தீயை தீயணைப்பான் மூலம் அனைத்து உள்ளார். விரைந்து செயல்பட்டு
தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததால் சேதம் மற்றும் உயிரிழப்பு நிகழாமல் தடுத்து உள்ளார் அருண் பாலாஜி.

ஆவடி நந்தவனமேட்டுர் பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ

மேலும் அருண் பாலாஜி டிப்ளமோ பிரிவில் (தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு) இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருப்பதாக கூறினார்.
அருண் பாலாஜியின் இந்த செயல் அங்கு இருக்கும் மக்களின் பாராட்டுதல்களுக்கு உறியதாக இருந்தது.

ஆவடி நந்தவனமேட்டுர் பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ

எரிவாயு கசிவு ஏற்பட்ட பகுதியில் உள்ள மக்களால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்பு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சிலிண்டரை பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்து சிலிண்டர் நிறுவனத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் வந்து சிலிண்டரின் திறப்பு பகுதியை காற்றில் திறந்து விடுவிக்க பட்டது.

MUST READ