கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக ஆவடியில் பாஜக மாவட்ட நிர்வாகி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்..
பொய் வழக்கு போட்டு பாஜக நிர்வாகியை கைது செய்ததாக நீதிமன்றம் அழைத்து சென்ற வாகனத்தை முற்றுகையிட்டு போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜகவினர்.கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி காவல் துறை வாகனத்தில் ஏறாமல் தான் எந்த தவறும் செய்யவில்லை என செய்தியாளர்களிடம் பேச முயன்றதால் பரபரப்பு.
சென்னை பூந்தமல்லி அருகே திருமழிசை பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் இவர் வெள்ளவேடு காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார்,ஆனந்த் ராஜ் பாஜக திருவள்ளூர் மேற்கு மாவட்ட பட்டியல் அணி துணைத்தலைவராக பதவியில் உள்ளார்.. இந்நிலையில் ஆனந்தராஜ் ஆவடி சி டி எச் சாலையில் உள்ள ஒரு இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடையில் அதன் உரிமையாளர் கவியரசுவை, கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த 2000 ரூபாயை பறித்து சென்றதாக வழக்கு பதிவு செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர் ஆவடி மாநகர காவல் துறையினர்.
இதற்கிடையே பாஜக மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்க முயற்சிப்பதாக போலீசார் நீதிமன்றம் அழைத்து செல்லும்போது வாகனத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜகவினரால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து பாஜகவினர் கூறுகையில் ஆனந்தராஜ் ஆவடி அருகே கவரப்பாளையத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் பாரில் சட்டவிரோத மது விற்பனை செய்வதோடு கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதாக கேட்டபோது இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்ட நிலையில் வழிப்பறி வழக்கு பதிவு செய்து தற்போது அவருடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குற்றம் சாடியுள்ளனர். மேலும் கள்ள சந்தையில் மது விற்பனை செய்ததாக பார் ஊழியர்கள் மற்றும் மது பாட்டில்களை பாஜகவினர் கையும் களவுமாக பிடித்து கொடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் ஆவடி போலீசார் எடுக்கவில்லை.புகாரை ஏற்கவும் இல்லை என பகீர் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது..