ஆவடி CRPF கபடி போட்டி 2023 – கோப்பையை வென்றது யார்?
கு&ப் சென்டர் சி.ஆர்.பி.எஃப். ஆவடியில் 24 ஜுலை முதல் 27 ஜுலை 2023 வரை இன்டர் செக்டர் கபடி சாம்பியன்ஷிப் நடைபெற்றது. CRPF இந்தியாவின் மிகப்பெரிய துணை ராணுவப் படை மற்றும் அனைத்து மட்டங்களிலும் விளையாட்டு நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறது. CRPF-இன் விளையாட்டு வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று படைக்காகவும், நாட்டுக்காகவும் விருதுகளை வென்றுள்ளனர்.

இந்த போட்டியானது CRPF-இல் உள்ள கபடி வீரர்களுக்கு புதிய திறமைகளை அடையாளம் காண்பதற்காக நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் பீகார் சென்ட்ரல், சத்தீஸ்கர், தகவல் தொடர்பு, டேராடூன், ஜார்கண்ட், கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம் வடக்கு , வடகிழக்கு, வடமேற்கு, ஒடிசா, ராஜஸ்தான், ஸ்ரீநகர், திரிபுரா மேற்கு, மேற்கு வங்கம், RAF மற்றும் தெற்கு படைபிரிவுகளை சார்ந்த 240 வீரர்கள் பங்கேற்றனர்.
இன்று நடந்த முதல் அரை இறுதி போட்டியில் ராஜஸ்தான் செக்டர் அணி 44-25 என்ற புள்ளி கணக்கில் கேரளா மற்றும் கர்நாடகா செக்டர் அணியை வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. அடுத்த அரை இறுதி போட்டியில் தெற்கு பிராந்திய அணி 43-30 என்ற புள்ளி கணக்கில் RAF செக்டர் அணியை வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. இறுதி போட்டியில் தெற்கு பிராந்திய செக்டர் அணி 33-30 புள்ளிகள் பெற்று சாம்பியன்ஷிப் கோப்பையை தட்டிச் சென்றது.
ராஜஸ்தான் செக்டர் அணி இரண்டாம் இடத்தை பிடித்தது. கேரளா மற்றும் கர்நாடகா அணி மற்றும் RAF செக்டர் அணி மூன்றாம் இடத்தை பிடித்தனர். அதைத்தொடர்ந்து CRPF வீரர்களின் குழந்தைகளின் கலாச்சார நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் கண்கவர் நிறைவு விழாவில் பேராசிரியர் திரு. ச. முத்தமிழ்ச்செல்வன், துணை வேந்தர் SRMIST, காட்டாங்குளத்தூர், சென்னை தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
திரு. மோ தினகரன் DIG, GC CRPF ஆவடி சிறப்பு விருந்தினர் மற்றும் நடுவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார். நிறைவாக திரு. காலித் அக்தர் துணை கமாண்டென்ட் நன்றி உரையாற்றினார்.