spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிஆவடி : உடற்பயிற்சியின்போது மாரடைப்பு -உதவி ஆய்வாளர் உயிரிழப்பு!

ஆவடி : உடற்பயிற்சியின்போது மாரடைப்பு -உதவி ஆய்வாளர் உயிரிழப்பு!

-

- Advertisement -

ஆவடியில் உடற்பயிற்சியின்போது மாரடைப்பு ஏற்பட்டு உதவி ஆய்வாளர்  உயிரிழந்த சோகம்!

ஆவடி : உடற்பயிற்சியின்போது மாரடைப்பு -உதவி ஆய்வாளர் உயிரிழப்பு!

ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்ற பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் பிரபாகர் (53).

we-r-hiring

பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த பிரபாகர் 1997 ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் சேர்ந்து தற்போது சிறப்பு உதவி ஆய்வாளர் நிலையிலிருந்து உதவி ஆய்வாளர் நிலைக்கு பதவி உயர்வு பெற்று பயிற்சி பெற்று வருகிறார்.

இதற்காக உடல் தகுதி மற்றும் அலுவல் பணி கையாள்வது குறித்த பயிற்சி கடந்த 8 தினங்களாக ஆவடி ஆயுதபடை வளாகத்தில் அளிக்கப்பட்டு வருகிறது

இன்று காலை உடற்பயிற்சியின் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பயிற்சி மைதானத்தில் மயங்கி விழுந்து சிகிச்சை பலனின்றி பிரபாகர் இறந்து விட்டார்.

பஸ் டிரைவரே பயணியின் நகையை திருடியதால் பரபரப்பு

MUST READ