Homeசெய்திகள்ஆவடிஉலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, ஆவடியில் சைக்கிள் பேரணி!

உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, ஆவடியில் சைக்கிள் பேரணி!

-

 

உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, ஆவடியில் சைக்கிள் பேரணி!
Photo: PIB Tamilnadu

உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, இயற்கை வளங்கள் மற்றும் நமது உடல் ஆரோக்கியத்தைப் பேண வேண்டும் என்பதை வலியுறுத்தி, போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவனம் (Combat Vehicles Research and Development Establishment- ‘CVRDE’) சார்பில் நேற்று (ஜூன் 05) காலை சென்னையை அடுத்த ஆவடியில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

பிரச்னைகளை மறைக்கவே செங்கோல்: ராகுல்காந்தி

சிவிஆர்டிஇ அலுவலகத்தின் முதன்மை நுழைவு வாயிலில் ஜூன் 05- ஆம் தேதி காலை 09.30 மணிக்கு தொடங்கிய நிலையில், எட்டு கிலோ மீட்டர் வரை சென்று பாரதியார் குடியிருப்பு வளாகத்தில் காலை 11.30 மணிக்கு நிறைவடைந்தது. சைக்கிள் பேரணியை சிவிஆர்டிஇ- யின் இயக்குநர் வி.பாலமுருகன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, ஆவடியில் சைக்கிள் பேரணி!
Photo: PIB Tamilnadu

3டி தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள ஆப்பிள் ஹெட்செட்!

சைக்கிள் பேரணியில் சுமார் 20- க்கும் மேற்பட்டோர் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பதாகைகளுடன் கலந்து கொண்டனர். பின்னர், சைக்கிள் பேரணியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

MUST READ