ஆவடி அடுத்த கோவில்பதாகை பகுதியை சார்ந்த புஷ்பா என்பவர் ஆவடி டேங்க் பேக்ட்ரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் கடந்த 1.10.2021 ஆண்டு உடன் பிறந்த அண்ணன் நடராஜன் எங்களது அம்மாவின் பெயரில் உள்ள திருமுல்லைவாயல் கிராமத்தில் 2 ஏக்கர் 96 சென்ட், சொத்துக்களை அண்ணன் நடராஜன், அவரது மகன் (ராஜராம் ) அவரது மருமகள் (வெங்கட்டம்மாள்) அவர்களின் பெயரில் போலியாக பத்திரம் தயார் செய்து பெயர் மாற்றம் செய்து விற்பனையில் ஈடுபட்டார்.
இதனை அறிந்து நடராஜனின் தங்கை புஷ்பா ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் அளித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், 48 சென்ட் இடத்தை இரண்டு நபர்களுக்கு விற்பனை செய்து போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்ததை அறிந்து பூந்தமல்லி கூடுதல் அமர்வு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பத்திரப்பதிவு அலுவலக அதிகாரிகள் உறுதுணையாக செயல்பட்டு போலி ஆவணங்களை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்வதை தடுக்கும் வகையில் இரண்டு முறை புகார் மனு அளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் அலைகழித்து வந்துள்ளனர்.
அதனால் இன்று புஷ்பா குடும்பத்தார் அனைவரும் இணைந்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் முறைப்படி ஆன்லைன் மூலம் பணம் கட்டி நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருக்கும் ஆவணம் அனைத்தையும் புகார் மனுவாக அளித்தனர்.
மேலும் காவல் நிலையத்திலும் நீதிமன்றத்திலும் வழக்கு இருக்கும் பொழுது பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்பதையும் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் அம்பத்தூர் பத்திரப்பதிவு பதிவாளர் போலி பத்திரம் பதிவு செய்பவர்களுக்கு உறுதுணையாக இருப்பதை அரசு கருத்தில் கொண்டு நேரில் ஆய்வு செய்து, இதுபோல் போலி ஆவணங்களை பதிவு செய்யும் அதிகாரிகளை கண்டறிந்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.